tamilnadu

img

சுங்கச்சாவடிகளை முற்றுகையிட்டு வாலிபர் சங்கம் மறியல்

மதுரை, செப்.1- ஒன்றிய அரசின் சுங்கச்சாவடி ஊழல்,  சுங்கச்சாவடி கட்டண உயர்வை கண்டித்து  இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் உள்ள சுங்கச் சாவடிகள் முன்பு மறியல் போராட்டம் வெள்ளியன்று நடைபெற்றது.  செங்கல்பட்டு பரனூர் சுங்கச்சாவடியில் வாகனங்களை அனுமதித்ததில் குறைவான வாகனங்களுக்கு மட்டுமே கட்டணம் வசூல் செய்யப்பட்டுள்ளதாகவும், மதுரை கப்பலூ ரில் 25 சதவீத வாகனங்களுக்கும், ஆத்தூரில்  36 சதவீத வாகனங்களுக்கும் கட்டணம் பெறா மல் அனுமதித்ததாக சிஏஜி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில், சுங்கச்சாவடி வசூலில் ஒன்றிய பாஜக அரசு ஊழல் செய்துள்ளதாக வும், வெள்ளியன்று முதல் உயர்த்தப் பட்டுள்ள சுங்க கட்டண உயர்வை திரும்பப்  பெற கோரியும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மதுரை புறநகர், மதுரை மாநகர், திண்டுக்கல், விருதுநகர், தேனி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த தலைவர்கள் மதுரை-திருமங்கலம் சாலையில் உள்ள கப்பலூர் சுங்கச்சாவடி முன்பு சாலை போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடு பட்டவர்களை காவல்துறையினர் கைது  செய்ய முயன்றனர். அப்போது போராட்டத் தில் ஈடுபட்டவர்களுக்கும், காவல்துறை யினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில், சிலருக்கு காயம் ஏற்பட்டு ரத்தம் வந்தது.  இதனால்,   போராட்டத்தில் ஈடுபட்ட வாலிபர் சங்கத்தினர் காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 40 நிமி டத்திற்கு மேலாக நடைபெற்ற போராட்டத் தால் கப்பலூர் சுங்கச்சாவடியில் போக்கு வரத்து பாதிப்பு ஏற்பட்டது.  மறியல் போராட்டத்திற்கு சங்கத்தின் மாநிலச் செயலாளர் ஏ.வி.சிங்காரவேலன் தலைமை வகித்தார். இதில் மதுரை புறநகர் மாவட்டத் தலைவர் வி.கருப்பசாமி, செய லாளர் பி.தமிழரசன், பொருளாளர் எஸ்.பாலகிருஷ்ணன், மதுரை மாநகர் மாவட்டத் தலைவர் பாவெல் சிந்தன், மாவட்டச் செய லாளர் த.செல்வா, பொருளாளர் வேல்தேவா, மாநிலச் செயற்குழு உறுப்பினர் என்.நிருபனா, திண்டுக்கல் மாவட்டச் செயலா ளர் கே.ஆர்.பாலாஜி, பொருளாளர் எம்.பிரேம், தேனி மாவட்டச் செயலாளர் முனீஸ் வரன், துணைச் செயலாளர் டி.நாகராஜன் ஆகியோர் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

பரனூர்

சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சா லையில் செங்கல்பட்டு நகருக்கு அருகில் அமைந்துள்ள பரனூர் சுங்க சாவடியை அகற்றிவிடவும், அதன் சட்டவிரோத கொள்ளையை தடுத்து நிறுத்தவும்  வலி யுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநில தலைவர் எஸ்.கார்த்திக் தலைமையில் பரனூர் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு ஏராளமானோர் மறியல்  போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத் தில் சங்கத்தின் மாநில துணைத் தலைவர் சரவணதமிழன், மாநிலகுழு உறுப்பினர் ஜானகிதேவி, தென்சென்னை மாவட்ட தலை வர் சுரேஷ், செயலாளர் சந்துரு, செங்கல்பட்டு மாவட்ட தலைவர் இரா.சதீஷ்,  மாவட்ட செயலாளர் ஜீவானந்தம் உள்ளிட்ட  பலர் கலந்து கொண்டனர்.  தகவல் அறிந்து வந்த செங்கல்பட்டு கூடுதல் காவல் கண் காணிப்பாளர் பாலமுருகன் தலைமையில் காவலர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட வர்களை கைது செய்தனர்.