சிபிஎம் மக்கள் சந்திப்பு பிரச்சாரத்திற்கு கிடைத்த வெற்றி'
7 குடும்பங்களுக்கு மாற்று இடம் வழங்கல்
தஞ்சாவூர், ஜூன் 18 - தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு ஒன்றியம் காருகுடியில்கடந்த ஜூன் 12 அன்று மக்கள் சந்திப்பு இயக்கம் நடைபெற்றது. அப்போது திருவை யாறு தாலுகா, காருகுடியில் வெள்ளக்கரை என்ற இடத்தில் 40, 50 ஆண்டுகளாக குடியிருந்து வருப வர்களை நீதிமன்ற உத்தரவை பயன் படுத்தி அகற்றும் முயற்சி நடைபெற்றது. பாதிக்கப்பட்டவர்கள் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் உதவியை நாடினர். இதனையடுத்து ஜூன் 15 அன்று தஞ்சை வந்த தமிழக முதல்வ ருக்கு வருவாய் கோட்டாட்சியர் வாயி லாக மனு கொடுக்கப்பட்டது. ஜூன் 16 அன்று மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் பங்கேற்ற மக்கள் சந்திப்பு பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாற்று இடம், குடிமனைப் பட்டா, குடியிருக்க தொகுப்பு வீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இந்நிலையில் ஜூன் 17 அன்று திருவையாறு ஒன்றியம் காருகுடியில் காலம் காலமாக வசித்து வரும், மிக வும் வறிய நிலையில் உள்ள மக்களை, ஆக்கிரமிப்பு என்ற பெயரில் வரு வாய்த்துறை, நீர்வளத் துறையினர் காவல்துறையைக் கொண்டு அச்சு றுத்தி, பொக்லைன் இயந்திரங்கள் கொண்டு அப்புறப்படுத்த மேற்கொண்ட முயற்சியை தடுத்து, பொதுமக்கள் மற்றும் அனைத்து கட்சிகளையும் இணைத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய நேரடி களப் போராட் டத்துக்கு மாபெரும் வெற்றி கிடைத்தது. இதையடுத்து, திருவையாறு வட்டாட் சியர், துணை காவல் கண்காணிப் பாளர் மற்றும் அலுவலர்கள் சமா தானப் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், காருகுடி அக்ரஹாரத்தில் சாலையோரம் குடியிருக்கும் 7 குடும்பத் தினருக்கு உடனடியாக மாற்று இடம் வழங்கப்பட்டது. இதற்கான மனைப் பட்டா வரும் திங்கட்கிழமை வழங் கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. மேலும், அவர்களுக்கு தொகுப்பு வீடு கட்டித் தர வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வலியுறுத் தப்பட்டுள்ளது. இதே காருகுடியில்தான், 50 ஆண்டுகளுக்கு முன்பு ஒடுக்கப்பட்ட மக்களுக்கான சுடுகாட்டு பாதைக் காக வரலாற்று சிறப்பு மிக்க போராட் டத்தை தியாகி என்.வெங்கடாச்சலம் நடத்தி வெற்றி கண்டதை அந்த பகுதி முக்கிய பிரமுகர்கள் நினைவு கூர்ந்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இன்றைய தலையீட்டையும், வெற்றி யையும் பாராட்டி கட்சிக்கு நன்றி தெரி வித்தனர். இந்த கிளர்ச்சி இயக்கத்தில், சிபிஎம் மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் என்.வி.கண்ணன், ஒன்றி யச் செயலாளர் ஏ.ராஜா மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.