சென்னை தண்டையார்பேட்டையில் புதுப்பிக்கப்பட்ட தோழர் ஜீவா பூங்காவையும், சிலையையும் சுதந்திர போராட்ட வீரர் ஆர்.நல்லக்கண்ணு திறந்து வைத்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், வடசென்னை தொகுதி மக்களவை உறுப்பினர் கலாநிதி வீராசாமி, ஆர்.கே.நகர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜெ.ஜெ.எபிநேசர், மாமன்ற உறுப்பினர் எம்.ரேணுகா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.