tamilnadu

img

விருதுநகர் சந்தை - நல்லெண்ணெய், கடலை எண்ணெய் விலை கிடுகிடு உயர்வு

விருதுநகர், செப்.10- விருதுநகர் சந்தையில் கடலை எண்ணெய் மற்றும் நல்லெண்ணெய் விலை திடீரென அதிக அளவில் உயர்ந்  தது. இதனால் பொது மக்கள் அதிர்ச்சி யடைந்தனர். விருதுநகர் சந்தையில் வாரந் தோறும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைப் பட்டியல் வெளி யிடப்பட்டு வருகிறது. அதில், கடந்த  வாரம் ரூ.15 கிலோ கடலை எண்ணெய் ரூ.2900-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது ரூ.50  உயர்த்தப்பட்டு ரூ.2950க்கு விற்கப்படு கிறது. இதேபோல் நல்லெண்ணெய் 15 கிலோ விலையானது கடந்த வாரம்  ரூ.5280க்கு விற்கப்பட்டு வந்த நிலை யில், திடீரென ரூ.165 உயர்த்தப்பட்டு ரூ.5445க்கு விற்பனை செய்யப்படு கிறது. இதனால், பொது மக்கள் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.

பருப்பு விலை குறைந்தது 

கடந்த வாரம் 100 கிலோ துவரம் பருப்பு (புதுஸ்நாடு ) ரூ.10200க்கு விற்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ரூ.400 குறைவு ஏற்பட்டு ரூ.9800க்கு விற்பனையாகிறது. இதேபோல் புதுஸ் லயன் வகை கடந்த வாரம் ரூ.11 ஆயிரத்திற்கு விற்ப னையான நிலையில் தற்போது ரூ.400  குறைந்து ரூ.10,600க்கு விற்கப்படு கிறது. மேலும், பட்டாணி பருப்பு 110 கிலோ (இந்தியா ) கடந்த வாரம் ரூ.6300க்கு விற்கப்பட்டு வந்த நிலையில், தற்போது ரூ.100 குறைந்து 6200க்கு விற்கப்படு கிறது. இதேபோல், உளுந்து ( நாடு) ரூ.8200க்கு விற்பனையான நிலையில் இந்த வாரம் ரூ.400 குறைவு ஏற்பட்டு தற்போது ரூ.7800க்கு விற்கப்படுகிறது. மேலும் பாசிப் பயறு ( இந்தியா) 100 கிலோ ரூ.7ஆயிரத்திற்கு விற்கப் பட்டு வந்த நிலையில், தற்போது ரூ.200 குறைவு ஏற்பட்டு ரூ.6800க்கு விற்கப்படுகிறது.

பாமாயில் விலை சரிவு 

பாமாயில் விலையானது ஒவ் வொரு வாரமும் சரிவைச் சந்தித்து வருகிறது. அந்த வகையில் கடந்த வாரம் 15 கிலோ ரூ.1760க்கு விற்கப்  பட்டு வந்த நிலையில் தற்போது ரூ. 160 குறைந்து, தற்போது ரூ.1600க்கு விற்கப்படுகிறது. பிற உணவுப் பொருட்களின் விலை யில் எவ்வித மாற்றமும் ஏற்பட வில்லை.

 

;