tamilnadu

தீக்கதிர் விரைவு செய்திகள்

  1. பாஜகவை எதிர்க்கும் கட்சியானது ஆளும் கட்சி யாகவுள்ள மாநிலங் களில் ஆளுநர்கள் தங்கள் அதிகார எல்லையைத் தாண்டி எதிர்க்கட்சித் தலைவர் போல் செயல் படுவதாகவே ஐயம் எழு கிறது. கேரள ஆளுநரின் நடவடிக்கைகள் இதற்கு நல்ல உதாரணம். தமிழ கத்திலும் இதே போக்கு தான் நிலவுகிறது. இது போன்ற நிகழ்வுகள் கூட் டாட்சித் தத்துவத்திற்கு எதிரானது. மாநில சுயாட்சியை கேள்விக் குறியாக்குகிறது.  சட்ட மன்றத்தில் நிறை வேற்றப்பட்ட மசோதாக் களுக்கு ஒப்புதல்தர இழுத் தடிப்பது; “அரசியல் சாசனம் வழங்காத” பல் கலைக்கழக வேந்தர் என்ற பதவியின் மூலம் அரசியல் செய்வது என்ப தெல்லாம் ஆளுநரின் பத விக்கு அழகல்ல என  மக்கள் நீதி மய்யம்  டுவிட்டர் பதிவில் கண்ட னம் தெரிவித்துள்ளது. 
  2. கோவை குண்டுவெடிப்பு சம்பவம் மூலம் ஏதோ ஒரு ஆபத்து இருக்கிறது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. எனவே தமிழ் நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலை வர் நல்லகண்ணு பேச்சு.
  3. “மொபைல் பே” பண  பரிவர்த்தனை செய லிக்கு இடைக்காலத் தடை விதிப்பு. வர்த்தக சின் னம் தொடர்பாக “போன் பே” நிறுவனம் தாக்கல் செய்த மனுவில் சென் னை உயர்நீதிமன் றம் அதி ரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
  4. மருதுபாண்டியர் குரு பூஜையை முன்னிட்டு சிவகங்கை, தேவகோ ட்டை, இளையான்குடி, மானாமதுரை, காளை யார்கோவில், திருப்புவ னம் தாலுகாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு வியாழனன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
  5. பசும்பொன் தேவர் தங்கக் கவசத்தை தங்களுக்கு கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எடப் பாடி பழனிச்சாமி, ஒ.பன் னீர் செல்வம் நிராகரிப்பு. ராமநாதபுரம் மாவட்ட வருவாய் அதிகாரி, தேவர் நினைவிட பரா மரிப்பாளரிடம் தங்கக்கவ சத்தை கொடுக்க மதுரை உயர்நீதிமன்ற கிளை அதிரடி உத்தரவு.
  6. நயன்தாரா - விக்னேஷ் சிவன் தம்பதியின் இரட்டை குழந்தை விவ காரத்தில் விதிமீறல் இல்லை. இருவரின் பதிவு திருமணம் 11.03.2016 அன்று நடைபெற்றதாக பதிவு சான்றிதழ் மருத்துவமனை சார்பில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் உண்மைத் தன்மை பதிவு துறையால் உறுதி செய்யப்பட்டுள் ளது என தமிழ்நாடு சுகா தாரத்துறை தகவல் வெளி யிட்டுள்ளது.
  7. கணவரை ஆதாரமின்றி குடிகாரர், பெண்மோகம் கொண்டவர் என கூறு வது சித்ரவதைக்கு சமம். இதுபோன்ற பொய்யான குற்றச்சாட்டு, அவரின்  நன்மதிப்பை கெடுக் கும் என மும்பை உயர்நீதி மன்றம் வித்தியாசமான தீர்ப்பை வழங்கியுள்ளது.
  8. உபேர் (Uber) நிறுவனத் தின் ஆட்டோ தாமதமா னதால் விமானத்தை தவ றவிட்ட பெண்ணுக்கு நஷ்ட ஈடாக ரூ.20,000 செலுத்த மும்பை நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
  9. உக்ரைன் மீதான ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கையால் பல ஐரோப்பிய நாடுகள் நெருக்கடியைச் சந்தித்து வரும் நிலையில், ரஷ்யாவின் ஏற்றுமதி அதிகரித்தே வந்திருக்கிறது. 2022-ஆம் ஆண்டில் ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான புள்ளிவிபரத்தின்படி ஏற்றுமதியில் 25 விழுக்காடு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இறக்குமதியில் பெரும் சரிவைக் கண்டுள்ளது. இதனால், அந்நிய செலாவணி இருப்பில் ரஷ்யாவின் நிலைமை வலுவாக இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
  10. எரிவாயுவைப் பயன்படுத்தி எரிசக்தியை உற்பத்தி செய்யும் 40 இயந்திரங்களை ரஷ்யாவுக்கு வழங்கும் ஒப்பந்தத்தில் ஈரான் கையெழுத்திட்டுள்ளது. இயந்திரங்களுக்காகப் பிற நாடுகளை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த ஈரான் சொந்தமாகத் தயாரித்ததோடு, மற்ற நாடுகளுக்கும் தரும் நிலைக்கு உயர்ந்திருக்கிறது. ரஷ்யா மற்றும் ஈரான் ஆகிய இருநாடுகளிலும் ஏராளமான இயற்கை எரிவாயு இருப்பு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
  11. ஊதிய உயர்வு கோரி தென் ஆப்பிரிக்க பொதுத்துறை ஊழியர்கள் வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளனர். எந்தவிதமான சம்பள உயர்வு இல்லை என்று கைவிரித்ததோடு, அத்தகைய உயர்வு மூன்று ஆண்டுகளுக்கு தரமுடியாது என்றும் அரசு அறிவித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள தென் ஆப்பிரிக்கப் பொதுத்துறை ஊழியர்கள் சங்கம், ஏழு நாட்கள் தொடர்ந்து வேலை நிறுத்தம் செய்யப்போவதாகக் கூறியிருக்கிறது. அக்டோபர் 24-ஆம் தேதியன்று வேலை நிறுத்த நோட்டீசையும் சங்கம் அளித்துள்ளது.