tamilnadu

பெருநகரங்களில் தொற்று எண்ணிக்கை குறையத் தொடங்கி உள்ளது: மா.சுப்பிரமணியன்

சென்னை, ஜன. 23 - பெருநகரங்களில் தொற்று எண்ணிக்கை குறையத் தொடங்கி உள்ளது. எனவே, ஞாயிற்றுக்கிழமை களில் முழு ஊரடங்கு ரத்துசெய்வது குறித்து பரிசீலிக்கப்படும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் ்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு உச்சத்தை எட்டியுள்ளது. தொற்று எண்ணிக்கை நாளொன்றுக்கு சுமார் 30 ஆயிரத்தை கடந்துள்ளது. இந்த சூழலில் கொரோனா பரவலின் வேகத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கை யாக இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இந்நிலையில் மாவீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, சென்னையின் மெரி னாவில் உள்ள அவரது சிலைக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.

அப்போது செய்தியா ளர்களிடம் அமைச்சர் ்மா.சுப்பிரம ணியன் கூறியதாவது: தமிழகத்தில் 2 வாரமாக இரவு நேர ஊரடங்கு, ஞாயிறு முழு ஊர டங்கு அமலில் உள்ளது. மக்களும் நன்கு ஒத்துழைக்கிறார்கள். 2 தவணை தடுப்பூசி போட்டுக் கொண்ட வர்களுக்கு உயிரிழப்பு அபாயம் இல்லை. தடுப்பூசி போடாதவர்களுக்கே பிரச்சனை ஏற்படுகிறது. சென்னையில் தினசரி 9 ஆயிரம் பேருக்கு தொற்று பாதிப்பு என்றிருந்த நிலையில், சனிக் ்கிழமையன்று 6 ஆயிரமாக குறைந்து ள்ளது. தொற்றின் அளவு 30 ஆயிரமாக இருந்தபோதும் இறப்பு விகிதம் குறைந் ்துள்ளது. தொற்றால் இறப்பவர்களில், 95 விழுக்காட்டினர் முதல் தவணை தடுப்பூசி கூட போட்டுக் கொள்ள தவர்கள், வயது மூப்பு காரணமாக இணைநோய் உள்ளவர்களாக உள்ளனர். இந்தியாவின் பெருநகரங்களில் கொரோனா தொற்று எண்ணிக்கை குறையத் தொடங்கியுள்ளது. எனவே, தொற்றுக்கு விரைவில் முற்றுப்புள்ளி ஏற்படும்போது, முழு ஊரடங்கு தேவை யில்லாத ஒன்றாக இருக்கும். எனவே,கொரோனா தொற்று குறைந் ்தால் வரும் வாரங்களில் ஞாயிறு முழு ஊரடங்கு குறித்து முடிவுகள் எடுக்கப் ்படும். இவ்வாறு அவர் கூறினார்.