tamilnadu

img

தமிழக மீனவர் துயரத்திற்கு மோடி அரசே காரணம்

புதுக்கோட்டை, ஜன.25 -  தமிழக மீனவர்கள் படும் தொடர் துன்ப துயரங்களுக்கு ஒன்றிய அரசின் அலட்சியமே காரணம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் குற்றம்சாட்டினார். செவ்வாயன்று புதுக்கோட்டையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது: நெடுஞ்சாலை தொடர்பாக ஒன்றிய அரசின் நடவடிக்கைகளுக்கு தமிழக அரசு  ஒத்துழைக்கும் என முதல்வர் தெரி வித்துள்ளார். சாலை விரிவாக்கம், பரா மரிப்பு அவசியம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதேநேரத்தில், விவசாயி களிடம் கைப்பற்றப்படும் நிலத்திற்கு, குத்தகை விவசாயிகளுக்கு, வீடுகளை இழந்தவர்களுக்கு உரிய இழப்பீடு கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும். சேலத்திலிருந்து சென்னைக்கு எட்டு வழிச்சாலைத் திட்டத்திற்கு அப்பகுதி யைச் சேர்ந்த மக்கள் கடும் எதிர்ப்பைத்  தெரிவித்தனர். சென்னை உயர்நீதிமன்ற மும் திட்டத்தை ரத்து செய்தது.

இந்நிலை யில்,  பசுமைத் தீர்ப்பாயத்தில் உரிய அனுமதி பெற்று திட்டத்தை செயல்படுத்தலாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. சேலத்தி லிருந்து சென்னைக்கு ஏற்கனவே, இரண்டு வழிகளில் சாலைவசதி இருந்தும் புதிதாக சாலை தேவையில்லை என வலியுறுத்தி அப்பகுதி விவசாயிகள் பிரதமர் வரை மனுக் கொடுத்து வலியுறுத்தி உள்ளனர். இக்கோரிக்கையில் உள்ள நியாயத்தை எடுத்துக்கூறி திட்டத்தை கைவிட முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென்ற நீதிமன்ற உத்தரவை வைத்துக்கொண்டு சென்னை போன்ற  நகரங்களில் வசிக்கும் பல்லாயிரக்கணக் கான வீடுகளை இடிக்கும் நடவடிக்கைகளில் அதிகாரிகள் இறங்கியுள்ளனர். நகர வளர்ச்சியில் பெரும்பாலான குளங்கள் அதற்குறிய அடையாளத்துடன் இல்லை.

அந்தப் பகுதியில் பல ஆண்டுகளாக வீடு கட்டி, மின் இணைப்புப் பெற்று குடி யிருந்து வருகின்றனர். இவர்களை வெளி யேற்றினால் அவர்கள் எங்கே போவார்கள். மக்களின் வாழ்வாதாரம் குறித்து கவலைப்படாமல் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருப்பது வருத்தமளிக்கிறது. தமிழகத்தை மதவெறி களமாக மாற்றி அரசியல் ஆதாயம் தேடுவதற்கு பாஜக தொடர்ந்து முயற்சிக்கிறது.  திருக்காட்டுப் பள்ளி கிறிஸ்தவ பள்ளியில் படித்த குழந்தையின் தற்கொலைக்கு மதமாற்றமே காரணம் என சித்தரித்து போராட்டங்களை பாஜக கட்டவிழ்த்துள்ளது. பாஜகவின் இத்தகைய மதவெறி அரசியலை மாநில அரசு கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தற்பொழுது கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. ஒமைக்ரானின் பாதிப்பு வரும் நாட்களில் உச்சமடையும் எனத் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலை யில், கிராமசபைக்கூட்டங்களை அரசு ரத்து செய்துள்ளது. தகுந்த பாதுகாப்புடன் கிராமசபைக் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும். நோய்த்தொற்று கட்டுக்குள் வரும்வரை டாஸ்மாக் கடைகளையும் மூட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநில அரசு விவசாயிகளுக்கான நகைக்கடன் தள்ளுபடிக்கான அறிவிப்பில் தேவையற்ற நிபந்தனைகளை தளர்த்த வேண்டும். தள்ளுபடி செய்யும் தொகை யை கூட்டுறவு வங்கிகளுக்கு அரசு உடனடி யாக வழங்க வேண்டும். இல்லையென் றால் கூட்டுறவு அமைப்புகள் கடும் நிதி  நெருக்கடியை சந்திக்க நேரிடும். தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தில் வருமான வரம்பை ரூ.75-ஆயிரத்திலிருந்து ரூ.1 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதை வரவேற் கிறோம். அதே நேரத்தில் மண்டபங்களில் திருமணங்கள் நடத்தக்கூடாது போன்ற நிபந்தனைகளை தவிர்க்க வேண்டும்.

தமிழக மீனவர்கள் படும் துயரங்களுக்கு முழுக்க முழுக்க ஒன்றிய அரசின் நடவ டிக்கையே காரணம். மோடி அரசு குஜராத் மீன வர்களுக்கு ஒரு நியாயம். தமிழக மீன வர்களுக்கு ஒரு நியாயம் என்ற நிலைப்பட்டை எடுக்கிறது. தமிழக அரசு தவறு செய்த முன்னாள் அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுப்பதை வரவேற்கிறோம்.  அதே நேரத்தில் இத்தகைய நடவடிக்கை ஊழல் புரிந்த அனை வர் மீதும் எடுக்கப்பட வேண்டும். இதில் பார பட்சம் கூடாது. மோடி தலைமையிலான ஒன்றிய அரசு வேலை வாய்ப்பில், சமூக நலத்துறையில், மருத்துவத்தில், நூறுநாள் வேலைத் திட்டத் திற்கான நிதியை கடுமையாக வெட்டி சுருக்கி உள்ளது. அதே நேரத்தில் பெரும் கார்ப்ப ரேட் நிறுவனங்களுக்கு வரிச்சலுகைகளை வாரி வழங்கிக்கொண்டு இருக்கிறது. இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் கூறினார். பேட்டியின் போது மாநில செயற்குழு உறுப்பினர் பெ.சண்முகம், மாநிலக்குழு உறுப்பினர் எம்.சின்னத்துரை எம்எல்ஏ, மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் ஆகி யோர் உடனிருந்தனர்.