tamilnadu

img

ஆலை முதலாளிகளே போராடும் நிலையை மோடி அரசு ஏற்படுத்திவிட்டது: கே.பாலகிருஷ்ணன்

விழுப்புரம்,மே.16- நூல் விலை உயர்வால் ஆலை முதலாளிகளே போராடவேண்டிய மோசமான சூழலை மோடி அரசு ஏற்படுத்தி விட்டதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன்  குற்றம் சாட்டினார். விழுப்புரத்தில் திங்களன்று (மே 16) செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:- நூல் விலை உயர்வால் மாநிலம் முழுவதும் உள்ள நூற்பாலைகள், ஜவுளி ஆலைகள் கடும் நெருக்கடி யில் சிக்கி தவித்து வருகின்றன. அதிலும் குறிப்பாக கோவை, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் ஆலை முதலாளிகளே போராடக்கூடிய மோசமான நிலை தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ளது. அதற்கு அடிப்படை காரணம் பருத்தி மற்றும் நூல் விலை பல மடங்கு உயர்ந்தி ருப்பதாகும்.

ஒரு கண்டு பருத்தி விலை சில மாதங்களுக்கு முன்பு ரூ.35 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை இருந்தது.  இன்றைக்கு ரூ. 1,05,000 ஆக உயர்ந்ததன் விளைவாக ஜவுளித் தொழிலை நடத்த முடியவில்லை. இதனால் சுமார் 25 லட்சம் தொழி லாளர்களின் குடும்பம் பெரும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளது. அது மட்டுமல்ல, ஒன்றிய அரசின் இந்திய பருத்தி உற்பத்தி கழகத்தை செயலிழக்க செய்து அதானி, அம்பானி நிறுவனங்கள் மொத்தமாக விவசாயிகளிடமிருந்து பருத்தியை கொள்முதல் செய்து பதுக்கி வைத்து பன் மடங்கு விலையை அதிகரித்துவிட்டனர். இந்த பின்னனியில், தமிழக ஜவுளி துறை முதலாளிகள் ஒன்றிய அமைச்சரை சந்தித்து ஒன்றிய பருத்தி உற்பத்தி கழகத்தை செயல்படுத்துங்கள் என கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால், பருத்தியை வாங்கி விற்பனை செய்யும் முதலாளிகள் அதிகமாக நட்ட மடை வார்கள் என்பதால் நீங்கள் கூறுவதை ஏற்று தடைபோட முடியாது என்று நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தமிழக ஜவுளி முதலாளிகளை  திருப்பி அனுப்பிவிட்டார். இந்த சூழ்நிலையில், தமிழக முதல்வரை கேட்டுக் கொள்வது ஏதோ ஆலை முதலாளி, தொழிலாளி என்று இல்லாமல் தமிழக அரசு ஒன்றிய அரசை நிர்பந்தப்படுத்தி பருத்தி கழகம் மூலம் பருத்தி கொள்முதல் செய்ய வற்புறுத்த வேண்டும். அது மட்டுமின்றி, தமிழகத்திலும தனியாக ஒரு பருத்தி கழகத்தை மாநில அரசு உருவாக்கி பதுக்கலை ஒழிக்க அரசே கொள்முதல் செய்து ஆலைகளுக்கு விநி யோகம் செய்ய வேண்டும். மேலும், தமிழ்நாட்டில் சிறு, குறுந் தொழில்கள் அழிந்துக் கொண்டே வருகிறது. குறிப்பாக அலு மினியம், இரும்பு, காப்பர் விலை அதிகரித்துவிட்டது.

இதனால், லட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு வேலை கொடுக்கக்கூடிய சிறு-குறு தொழில்கள் அழிந்து போகக் கூடிய ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனவே, ஒன்றிய அரசாங்கம் மூலப் பொருட்களை கொள்முதல் செய்து மானிய விலையில் கொடுத்தால் தான் இந்த தொழிலையும் பாதுகாக்க முடியும். பென்னடம் அம்பிகா சர்க்கரை ஆலை பல ஆண்டுகளாக மூடி கிடக்கிறது. அதேபோல், மதுரை மாவட்டத்திலும் அரசு சர்க்கரை ஆலை மூடப்பட்டுள்ளது. இதனால் கரும்பு விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகவே, அந்த ஆலை களை திறக்க மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் செய்தியாளர் கள் கேட்ட கேள்விகளுக்கு பதில ளிக்கையில், “திமுக ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டில் ஏராள மான சவால்களை எதிர்க்கொண்டு வருகிறது. கொரோனா உள்ளிட்ட இயற்கை இடர்பாடு களை யும் கடந்து வந்தது, கடுமையான பொருளாதார நெருக்கடிகளை சமாளித்துக் கொண்டு கொடுத்த வாக்குறுதிகளில் பலதையும் நிறைவேற்றியுள்ளது” என்றார். நகர, மாநகரப் பேருந்துகளில் மகளிருக்கு இலவச பயணம், நகைக் கடன் தள்ளுபடி போன்ற நடவடிக்கைகள் பாராட்டுக்குரியது என்றும் அவர்  கூறினார். மைக்ரோ பைனான்ஸ் நிறுவனங்கள் தங்களிடம் கடன் வாங்கிய பெண்களை கேவலப்படுத்துவதால் பல பெண்கள் தற்கொலை முடிவுக்கு செல்கிறார்கள்.

எனவே, ஒன்றிய அரசை யும், ரிசர்வு வங்கியையும் அனுகி அந்த கடனை தள்ளி வைக்கவும் முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாலகிருஷ்ணன் கேட்டுக் கொண்டார். கோவில் நில குடி யிருப்புகள் அகற்றம், குடி சைகள் இடிப்பு போன்ற மக்களை பாதிக்கும் எந்த பிரச்சினையாக தடுத்து நிறுத்த போராட்டம் நடத்தியிருக்கிறோம். அமைச்சர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினோம். அரசு போக்குவரத்து கழகங்களை  தனியாருக்கு விடுவதை ஒருபோதும் ஏற்க முடியாது என்றும்  என்றும் கே. பாலகிருஷ்ணன் தெரிவித்தார். இந்த பேட்டியின் போது விழுப்புரம் மாவட்டச் செயலாளர் என்.சுப்பிர மணியன்  உடனிருந்தார்.