tamilnadu

img

தென்காசி சலீம் முகம்மது மீரான் வாழ்வு மகத்தானது - அதை மக்களுக்கு பயன்படுத்தும் போது

தமிழ்நாட்டில் ஒன்றுபட்ட திருநெல் வேலி/வடஆற்காடு மாவட்டங்களில் தான் பீடித் தொழிலாளர்கள் கணிசமான அளவில் உள்ளனர். ஒன்றுபட்ட திருநெல் வேலி மாவட்டத்தில் இயங்கி வரும் பீடிக் கம்பெனிகளில் ஒரு சில கம்பெனிகளில் ஆண்கள் பெயரில் தான் பீடி பாஸ்புக் வழங்கு வது நெடுங்காலமாக நடைமுறையில் இருந்து வந்தது.  பீடி சுற்றுவது பெண்கள்; ஆனால் பாஸ்புக் ஆண்கள் பெயரில். இதன் முதன்மையான காரணம் மகப்பேறு நலச் சட்டத்தின் பயன்க ளை பீடி சுற்றும் பெண்களுக்கு மறுப்பது என்பது தெள்ளத் தெளிவு. இதுகுறித்து பீடித் தொழிலாளர் சங்கம் சார்பில் தோழர் ம.ராஜாங்கம் அவர்கள் பீடி நிறுவனங்களுக்கும்/அரசிற்கும் பலப்பல முறையீடுகளை அனுப்பினார். அவை கண்டு கொள்ளப்படாததால் உச்சநீதிமன்றத்திற்கு அஞ்சல் அட்டை வாயிலாக தனது முறை யீட்டை அனுப்பினார். உச்சநீதிமன்றம் அந்த அஞ்சல் அட்டையையே அரசியல் சட்டப் பிரிவு 32-ன்படி ரிட் மனுவாக ஏற்றுக்கொண்டு வழங்கிய வழிகாட்டுதல்களின் படி இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்க நீதிபதி கிருஷ்ணசாமி ரெட்டியார் கமிட்டியை தமிழ்நாடு அரசு அமைத்தது. அதன்படி ஆய்வுக்கு வந்த கமிட்டி முன்பு தோழர் ம.ராஜாங்கம் அவர்கள் பீடித்தொழி லாளர் சங்கம் (சிஐடியு) சார்பில் பீடி சுற்றும் பெண் தொழிலாளர்களுக்கு மகப்பேறு நலச் சட்டத்தின் பயன்களை கிடைக்க வொண்ணா மல் முற்றாக மறுக்கும் விதத்திலேயே ஆண்கள் பெயரில் நிர்வாகம் பாஸ்புக் வழங்குகிறது என்பதை அய்யந்திரிபுற, தனது திறமையான வாதத்தினாலும் தகுந்த ஆவணங்கள் மூலமும் நிரூபித்தார்.

அவரின் வாதங்களை கேட்ட நீதிபதி. கிருஷ்ணசாமி ரெட்டியார் அவர்கள் பீடி  சுற்றும் பெண்கள் பெயரில் பாஸ்புக் வழங்காமல் ஆண்கள் பெயரில் வழங்குவது என்பது அநீதி யான தொழில் நடவடிக்கை  என்று கடிந்து சொன்னதோடு மட்டுமல்லாமல் ஒரு பெண்ணின் பெயரிலாவது பீடி பாஸ்புக் போட்டு அதை தன்னிடம் காண்பிக்க வேண்டு மென்று சம்பந்தப்பட்ட பீடி நிறுவனத்திற்கு உத்தரவிட்டார். கமிட்டியின் ஆய்வு அறிக்கை/பரிந்துரை யைத் தொடர்ந்தே உண்மையாக பீடி சுற்றும் தொழிலாளிக்கே பாஸ்புக் வழங்கிட வேண்டும் என்ற வரலாற்று சிறப்புமிக்க/பொன்எழுத்துக் களால் பொறிக்கத்தக்க உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களை பெற முடிந்தது. பீடி சுற்றும் பெண் தொழிலாளர்கள் வாழ்வில் ஒளியேற்றிய இந்தத் தீர்ப்பை பெற தோழர் ம.ராஜாங்கம் அவர்கள் பட்டபாடு/சிந்திய வேர்வை கொஞ்ச நஞ்சமன்று. நிர்வாகத்தின் தொடர் அச்சுறுத்தல்க ளையும் புறந்தள்ளி, பெண்பீடித் தொழிலா ளர்களுக்கு மகப்பேறு நலச்சட்டத்தின் முழுமை யான பயன்களை பெற்றுத்தந்த தலைவரை அவர்களை அத்தொழிலாளர்கள் என்றென் றும் நினைவில் வைத்திருப்பார்கள். பிஎப் அலுவலகம் வீடுகளில் இருந்து ஐந்து லட்சம் தொழிலா ளர்கள் பீடி சுற்றி வந்தனர்.

இவர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் 1966ஆம் ஆண்டு பீடித்தொழிலாளர் சட்டம் மற்றும் அதனுடன் இணைந்த சட்டவரம்பிற்குள் வராமலும், பிரா விடெண்ட் பண்ட் சட்டவரம்பிற்கு உட்படா மலும் இருந்தனர். இதனால் அச்சட்டங்களின் படியான உரிமைகளை/சலுகைகளை அனு பவிக்க முடியாமல் அல்லல்பட்டு வந்தனர். மேற்குறித்த உச்சநீதிமன்ற விசாரணை யின் போது இவ்விவரங்களையும் தோழர் ம.ராஜாங்கம் விரிவாகவும், விளக்கமாகவும் எடுத்து வைத்தார். அதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்றம் வழங்கிய வழிகாட்டு தல்களின் படியே பீடித் தொழிலாளர்கள் நலனை முழுமையாக பாதுகாத்திட, திரு நெல்வேலியில் பிஎப் அலுவலகம் அமைந்தது. மேலும் பீடி நிறுவனங்களை மட்டுமே பிரத்யே கமாக (EXCLUSIVE) ஆய்வு செய்து, சட்ட மீறல்களுக்கு நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில், தொழிலாளர் துறையில் மொத்தம் 9 (பீடி) தொழிலாளர் உதவி ஆய்வர் பணியி டங்களும் உருவாக்கப்பட்டன. அதில் ஒன்று பட்ட திருநெல்வேலி மாவட்டத்திற்கென ஏழு (பீடி) தொழிலாளர் உதவி ஆய்வர் பணியிடங்க ளும், ஒன்றுபட்ட வட ஆற்காடு மாவட்டத்தில் இரு (பீடி)  தொழிலாளர் உதவி ஆய்வர் பணியி டங்களும் ஏற்படுத்தப்பட்டன.

இது, தொழிலா ளர் துறை வரலாற்றில் காணக் கிடைக்காத தொரு அரிய நிகழ்வாகும். இது தோழர் ம.ராஜாங்கம் அவர்களின் மற்றுமொரு சாதனை; இதனால் பறந்தோடியது தொழிலா ளர்களின் வேதனை. திருநெல்வேலி/தென்காசி/வி.கே.புதூர்/ஆலங்குளம்/முக்கூடல்/சேரன்மகாதேவி/வள்ளியூர் ஆகிய ஊர்களை தலைமை இடமா கக் கொண்டு 7(பீடி)தொழிலாளர் உதவி ஆய் வர் பதவிகள் தொழிலாளர் துறையால் அனுமதிக்கப்பட்டு இயங்கி வந்தன. பின்கா லத்தில் தொழிலாளர்கள் அவ்வலுவலகங்க ளை எளிதில் அணுகுவதற்கு வசதியாக அலுவ லகங்கள் அமைந்துள்ள தலைமையிட பகுதி களை மையப்படுத்தி (CENTRALIZATION) தொழிலாளர் துறையால் ஆணைகள் வழங்கப் பட்டன. அதன்படி திருநெல்வேலியை தலைமை இடமாகக் கொண்டு 2 தொழிலாளர் உதவி ஆய்வர்களும் தென்காசியை தலைமை இடமாகக் கொண்டு 3 தொழிலாளர் உதவி ஆய்வர்களும் அம்பாசமுத்திரம்/வள்ளியூரில் தலா ஒரு தொழிலாளர் உதவி ஆய்வரும் பீடி நிறுவனங்களில் ஆய்வு செய்வதற்கு என மட்டுமே பணிபுரிந்து வருகின்றனர். சுற்றிய பீடியை காய வைத்தல்... பீடி சுற்றும் தொழிலாளர்கள் பீடிகளை சுற்றிய பின்னர் அதை காயவைத்துத்தான் கம்பெனிக்கு கொடுக்க வேண்டும் என்று ஒரு பீடிக்கம்பெனி, தொழிலாளர்களுக்கு அழுத்தம் கொடுத்தது. இது தொழிலாளர்களின் வேலைப் பளுவை அதிகரிக்கும் என்பதுடன் பீடி சுற்றி முடிக்கும் பணிக்கு கூடுதலான நேரத்தை (OVER TIME) எடுத்துக் கொள்ளும் என்பதால் இது சாத்தியமற்றது என்பதை தொழிலா ளியோடு ஒரு தொழிலாளியாக இருந்து, உணர்ந்த தோழர் ம.ராஜாங்கம் சங்கத்தின் சார்பில் தொழிலாளர் துறை முன்பு ஒரு தாவாவை எழுப்பினார்.  விசாரணையின் போது நிர்வாகம், சுற்றிய பீடிகளை காயவைத்துத்தான் கொடுக்க வேண்டும் என்ற தனது நிலைப்பாட்டில் உறுதி யாக நின்றது. இது ஒரு சிறிய வேலைதானே, இதை செய்து கொடுப்பதில் என்ன தவறு? என அரசு (தொழிலாளர் துறை) கேட்டது.

இவைகளை ஏற்றுக் கொள்ளாத தோழர் ம.ராஜாங்கம் பீடி சுற்றும் போது, தொய்வு தரக்கூடிய அளவில் பீடி இலையை நனைப் பது, சுருட்டுவது, தூளை நிரப்புவது, அதன் பின்னர் இலை திறப்பை மூடுவது, இறுதியாக நூல் கட்டுவது உள்ளிட்ட ஒவ்வொரு வேலைக்கும் எவ்வளவு நேரமாகும் என்பதை நேரடியான செயல்முறை மூலம் விளக்கி, இதற்கே இவ்வளவு நேரமாகிறதே அதை காய வைத்துக் கொடுத்தால் இன்னும் எவ்வளவு நேரமாகும் என்று நிர்வாகத்தை பார்த்து கேட்டார். மேலும் காய வைத்தல் பணியைத் தவிர பிற பணிகளை ஒரு தொழிலாளிதான் இருந்த இடத்திலிருந்தே செய்து விடுவார் என தெரி வித்து, ஆனால் பீடிகளை காயவைப்பது என்பது தனித்த ஒரு பணி என்றும் அதனை பீடி சுற்றும் வேலைகளுடன் சேர்த்து செய்ய இயலாது என்றும் உறுதிபட தெரிவித்தார். மேலும் பீடி களை காயவைப்பதற்கு போதுமான இட வசதி வேண்டும் எனவும், பெரும்பாலான தொழிலாளர்களின் வீடுகள் தெருவை/ரோட்டை ஒட்டியே அமைந்து இருப்பதால் அவர்களால் தெருவில்தான் காயவைக்க முடியும் எனவும் அவ்வாறு காயவைப்பதால் ஆடு மாடுகள்/வாகனங்கள் போன்றவற்றால் இழப்பு ஏற்பட்டால் அதற்கு யார் பொறுப்பு? என நெத்தியடியாக/அடுக்கடுக்கான விவா தங்களை, நிர்வாகத்தின் கூற்றுகளுக்கு எதிராகவும், பீடித் தொழிலாளர்களுக்கு ஆதர வாகவும் எடுத்துவைத்து வெற்றிக்கனியை கொய்தார் என்பது அழிக்க முடியாத வரலாறு. பொது தோழர் ம.ராஜாங்கத்திற்கு போதிய ஆங்கிலப் புலமை இல்லாதிருந்த போதும் ஆங்கிலத்தில் இருந்த பீடித் தொழிலாளர் சட்டம் மற்றும் அதனுடன் இணைந்த சட்டங்க ளின் பிரிவு மற்றும் விதிகளில்மிகுந்த நிபுணத்து வம் பெற்றவராக விளங்கினார். பீடித் தொழி லாளர்களின் மீது அவர்களின் நலன் மீது அவருக்கு இருந்த ஆழ்ந்த பற்று இதன் மூலம் நமக்கு புலப்படுகிறது. பீடி நிறுவனங்கள் உடனான தொழிற்தா வாக்களில், அவர் சட்டப்பிரிவு மற்றும் விதிக ளின் உட்புகுந்து, நுண்ணறிவு மற்றும் பட்டறிவு டன் கூடிய விவாதங்களை தனக்கே உரிய பாணியில் எடுத்து வைத்து, வெற்றி கண்டிருக்கி றார். இது தொழிற்சங்க பொறுப்பில் உள்ள வர்கள்/ஈடுபாடுள்ளவர்கள் கவனிக்கத்தக்கது பின்பற்றத்தக்கது.

தொழிற்தாவாக்களில் தோழர் ம.ராஜாங் கம், சட்டப்பிரிவு, விதிகளை நுணுக்கமாக மேற்கோள் காட்டி விவாதம் செய்பவர், சட்டப் படியான உரிமைகளை பீடித் தொழிலா ளர்களுக்கு பெற்றுத் தரும் விதமாக கங்கணம் கட்டிக் கொண்டு இடையறாது செயல்படுவர் என தொழிலாளர் துறையினர் அறிந்திருந்த னர். இது அத்துறையினரின் சட்ட அம லாக்கத்திற்கு தூண்டு கோலாகவும், தொடக்கப் புள்ளியாகவும் அமைந்தது என்பது கடந்த கால வரலாறு; கடந்து போக இயலாத நிதர்சனம்.  மொத்தத்தில் மலரிலிருந்து மணத்தை/கடல்நீரிலிருந்து உப்பை/வானிலிருந்து சூரியனை/ தொழிலாளர்களிடமிருந்து உழைப்பை, சிஐடியு தொழிற்சங்கத்திடமிருந்து போர்க்குணத்தை எப்படி பிரிக்க முடியாதோ அப்படித்தான் பீடித்தொழிலாளர்களின் நல வாழ்விலிருந்து தோழர் ம.ராஜாங்கம் அவர்களையும் பிரிக்க முடியாது. அவர்கள் வாழ்வில் இரண்டறக் கலந்தவர் அவர். அவரை விட்டு விட்டு அல்லது தவிர்த்து விட்டு பீடித் தொழிலாளர்கள் வரலாற்றை எழுத இயலாது என்பது சர்வ நிச்சயம். வாழ்வு மகத்தானது – அதை மக்களுக்கு பயன்படுத்தும் போது. களப்பணிகளே மாபெரும் ஸ்தாபனத்தை மட்டுமல்ல....! மாபெரும் போராளியையும் உருவாக்கும் என்பார் தோழர் ஸ்டாலின். அதற்கு மிகச்சிறந்த எடுத்துக் காட்டு தோழர் ம.ராஜாங்கம்!  கட்டுரையாளர் : கண்காணிப்பாளர் - தொழிலாளர் துறை (பணிநிறைவு) மற்றும் மாவட்ட தலைவர் த.நாஅரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கம்