சென்னை, நவ. 12 - அரசு போக்குவரத்துக்கழக ஊழியர்களின் பிரச்சனைகளுக்கு அரசு விரைந்து தீர்வுகாண வேண்டும் என்று அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது. போக்குவரத்துக் கழகத்தில் செயல்படும் தொழிற்சங்கங்களின் கூட்டம் செவ்வாயன்று (நவ.12) பல்ல வன் இல்லத்தில் உள்ள சிஐடியு அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் தொமுச, சிஐடியு, ஏஐடியுசி, எம்எம்எஸ் உள்ளிட்ட 9 சங்கங்கள் கலந்து கொண்டன. இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேள னத்தின் (சிஐடியு) பொதுச் செயலா ளர் கே.ஆறுமுகநயினார் செய்தியா ளர்களிடம் கூறியதாவது: போக்குவரத்துக் கழகங்களில் தனியார்மய நடவடிக்கைகள் உள்ளிட்ட சில நடவடிக்கைகளை அரசு தொடங்கியுள்ளது. 50 ஆண்டு களாக பண்டிகைக் காலங்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால் தற்போது தனியார் பேருந்துகளை கொண்டு இயக்கியிருப்பது தேவையற்றது. அரசு அல்லது தனியார் பேருந்து எதுவாக இருந்தாலும் முழுக் கொள்ளளவோடு பயணிகளை கொண்டு இயக்கினாலும் கிலோ மீட்டருக்கு 30 ரூபாய்தான் வருவாய் கிடைக்கும். பொது மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் அரசு பேருந்துகள் இயக்கப்படுகிறது. ஆனால் தனி யார் பேருந்துகளுக்கு ஒரு கி.மீ., க்கு 51 ரூபாய் தரப்பட்டுள்ளது. அதா வது இழப்பீட்டு தொகையாக அரசு 21 ரூபாய் தந்துள்ளது. இதே போன்று அரசு போக்குவரத்துக் கழ கத்திற்கும் இழப்பீட்டு தொகை தர வேண்டும். அரசு பேருந்துகள் தினசரி 80 லட்சம் கிலோ மீட்டர் இயக்கப்படுகிறது. நாளொன்றுக்கு 16 கோடி ரூபாய் இழப்பு ஏற்படு கிறது. வருடத்திற்கு 6 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. இதனை அரசு ஈடு செய்ய மறுக்கிறது. இதனால் கழகத்திற்கு 45 ஆயிரம் கோடி ரூபாய் கடன் ஏற்பட்டுள்ளது. தொழிலாளர்களின் 15 ஆயிரம் கோடி ரூபாயை எடுத்து கழகங்கள் செலவு செய்துள்ளன. இதனால் பணி ஓய்வு பெறும் தொழிலாளர்களுக்கு பணப்பலன்களை வழங்குவ தில்லை. ஓய்வூதியர்களுக்கு 8 ஆண்டுகளாக அகவிலைப்படி வழங்கவில்லை. ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை ஒன்றரை ஆண்டு களாகியும் பேசி முடிக்கப்பட வில்லை.
8 அரசாணைகளை ரத்து செய்ய மறுப்பு
கழகத்தில் 25 ஆயிரம் காலிப் பணியிடங்கள் உள்ளது. அண்மை யில் அரசு வெளியிட்ட அரசாணை யில் 12 ஆயிரம் காலிப் பணியிடங் களில் 25 விழுக்காடு மட்டுமே நிரப்பப்படும் என்று கூறியுள்ளது. பேருந்துகளை குறைப்பது உள்ளிட்ட காரணங்களுக்காக அதிமுக ஆட்சி யில் போடப்பட்ட 8 அரசாணைகளை அரசு ரத்து செய்ய மறுக்கிறது. ஓய்வூதியம் இல்லாத மாநிலமாக... இந்தியாவிலேயே 2013 ஆம் ஆண்டிற்கு பின்னர் பணியில் சேர்ந்த வர்களுக்கு ஓய்வூதியம் இல்லாத மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. இவற்றை சரி செய்ய அரசிடம் கோரிக்கை மனு அளிக்க உள்ளோம். அதன் மீது நடவடிக்கை எடுக்கா விடில், நவம்பர் 3 ஆவது வாரத்தில் போராட்டத்திற்கு செல்வோம். அரசு உடனடியாக பேச்சுவார்த்தையை துவக்க வேண்டும். அரசு காலதாம தம் செய்வதால்தான் பண்டிகை நேரத்தில் சிக்கல் ஏற்படுகிறது. விழாக் காலங்களில் திட்டமிட்டு போராட்டங்கள் நடத்தப்படுவ தில்லை. இவ்வாறு அவர் கூறினார்.