tamilnadu

img

தனியார் கல்வி வியாபாரத்திற்கு அரசு துணைபோகக்கூடாது

சென்னை, ஜூலை 5 - டி.பி.ஜெயின் அரசு உதவி பெறும் கல்லூரியை சுயநிதி கல்லூரியாக மாற்ற  அனுமதிக்க கூடாது என்று தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கோரிக்கை  விடுத்துள்ளார். சென்னை துரைப்பாக் கத்தில் டி.பி. ஜெயின் கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு அரசு உதவி பெறும் 10 பாடப்பிரிவுகளும், 10 சுயநிதி பாடப்பிரிவுகளும் உள்ளது. கல்லூரி நிர்வா கம் கடந்த 3 ஆண்டுகளாக உதவி பெறும் பாடப்பிரிவு களில் மாணவர் சேர்க் கையை நடத்தாமல் உள்ளது. எனவே, அரசு உதவி பெறும் பாடப்பிரிவுகளில் மாணவர் சேர்கையை நடத்த வேண்டும் அல்லது  கல்லூரியை அரசு கையகப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி செவ்வா யன்று (ஜூலை 5) சைதாப் பேட்டையில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. டி.பி.ஜெயின் கல்லூரி பாதுகாப்பு குழு - இந்திய மாணவர் சங்கம் இணைந்து நடத்திய இந்த இயக்கத்தை கே. பாலகிருஷ்ணன் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

டி.பி.ஜெயின் கல்லூரி நிர்வாகம் நயவஞ்சகமாக, உதவி பெறும் கல்லூரியை சுயநிதி கல்லூரியாக மாற்றிக் கொள்ள அரசிடம் அனுமதி கோரியுள்ளது. அதற்கு அரசு அனுமதி அளிக்க கூடாது என்று முத லமைச்சரிடமும், உயர்  கல்வித் துறை அமைச் சரிடமும் வலியுறுத்தி உள்ளோம். இதனை அனுமதித்தால், சுயநிதி பாடப்பிரிவுகளுக்கு கல்லூரி நிர்வாகங்கள் நிர்ண யிப்பதுதான் கட்டணமாக இருக்கும். கல்லூரியை சுற்றியுள்ள கண்ணகிநகர், செம்மஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஏழை எளிய நடுத்தர மாணவர்கள் கல்லூரி செல்ல முடியாத நிலை உருவாகும். அரசு உதவிபெறும் கல்லூரியை சுயநிதி கல்லூரி யாக மாற்ற அனுமதித்து விட்டால், அதையே கார ணம் காட்டி 250 அரசு உதவி பெறும் கல்லூரிகளும் சுய நிதி கல்லூரியாக மாறிக் கொள்ள கோரிக்கை வைப்பார்கள். உயர் கல்வியில் சாதனை படைத்து முதலிடத்திலிருக்கும் தமிழகம் கடைநிலைக்கு தள்ளப்படும். ஆகவே, தனி யார் கல்வி வியாபாரத் திற்கு அரசு துணைபோகக் கூடாது. இவ்வாறு அவர் கூறினார். இந்தப் நிகழ்வுக்கு மாணவர் சங்கத்தின் தென்சென்னை மாவட்டத் தலைவர் ஆன்ந்த் தலைமை தாங்கினார். பல்கலைக் கழக  ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் பேரா.பால முருகன், பொதுப்பள்ளிக் கான மாநில மேடையின் பொதுச் செயலாளர் பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு, குடியாத்தம் அரசு கல்லூரி முன்னாள் முதல்வர் பேரா.சிவக்குமார், கல்லூரி ஆசிரியர் பணியில்லாத ஊழியர் சங்கத்தின் முன்னாள் தலைவர் சந்திர சேகர், மாணவர் சங்க மாவட்டச் செயலாளர் செய லாளர் இரா.பாரதி உள்ளிட்டோர் பேசினர்.