tamilnadu

ஒன்றிய பாஜக அரசுக்கு எதிரான பிரச்சார இயக்கம் தொடங்கியது

சென்னை, மே 25- பிரதமர் மோடி தலைமை யிலான பாஜக அரசின் மக் கள் விரோத பொருளாதாரக் கொள்கைகளை கண்டித்து நாடு தழுவிய அளவில் நடை பெறும் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக தமிழ்நாட்டிலும் புதன்கிழமை (மே 25) பிரச்  சார இயக்கம் தொடஙகியது. சிபிஎம், சிபிஐ, சிபிஐ (எம்எல்-லிபரேசன்) ஆகிய  கட்சிகளோடு விடுதலை சிறுத் தைகள் கட்சியும் இணைந்து இந்த இயக்கத்தை நடத்து கின்றன. பெட்ரோல், டீசல்,  சமையல் எரிவாயு பொருட் கள் மீது அநியாயமாக விதிக்  கப்பட்ட செஸ் உள்ளிட்ட  கூடு தல் வரிகளைக் கைவிட வேண் டும், பருப்பு, எண்ணெய் உள்  ளிட்ட அனைத்து அத்தியாவ சியப் பொருட்களையும் நியாய விலைக் கடைகளில் வழங்க வேண்டும். வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ள குடும்பங்கள் அனைத்துக்கும் மாதம் ரூ. 7500 நிதி உதவி வழங்க வேண் டும், தேசிய ஊரக வேலை  உறுதி திட்டத்தின் கீழ் கூடு தல் நிதி ஒதுக்கீடு செய்து  பதிவு செய்து கொண்டிருக் கும் அனைவருக்கும் 100 நாட்  களுக்கு வேலை தர வேண்டும். அரசுத் துறைகளில் உள்ள காலிப் பணியிடங் களை முழுமையாக நிரப்பிட வேண்டும், நகர்ப்புற வேலை உறுதி சட்டத்தைக் கொண்டு  வரவேண்டும் உள்ளிட்ட  கோரிக்கைகளை முன் வைத்து மே 26 , 27 ஆகிய தேதிகளில் தமிழகமெங்கும் ஒன்றிய, நகர, வட்டார தலை மையிடங்களில் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடை பெறவுள்ளன. அதன்படி, மே 25 தலைநகர் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட மாநிலத்  தின் அனைத்து பகுதிகளி லும் பிரச்சாரம் தொடங்கியுள் ளது. வீதி வீதியாக மக்களை சந்தித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தை விநியோ கம் செய்தனர்.

நாளை ஆர்ப்பாட்டம்

ஒருவார கால இயக்கத் தின் ஒரு பகுதியாக  மே 27 ஆம் தேதி சென்னை வள்ளு வர் கோட்டம் அருகில்  நடைபெறும் ஆர்ப்பாட்டத்  தில் சிபிஎம்மாநில செயலா ளர் கே.பாலகிருஷ்ணன், சிபிஐ மாநில செயலாளர் இரா.முத்தரசன், வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன், சிபிஐ எம்எல் நிர்வாகி நட ராஜன் ஆகியோர் பங்கேற்று உரையாற்ற உள்ளனர்.