tamilnadu

நீதிமன்றத்தில் குண்டுவெடித்து 3 பேர் பலி

லூதியானா,டிச.23- பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள  கீழமை நீதிமன்றத்தில் டிசம்பர் 23 அன்று குண்டுவெடிப்பு நிகழ்ந்தது.இதில் 3 பேர் பலியாகினர். பஞ்சாப் மாநிலம் லூதியானா வில் உள்ள கீழமை நீதிமன்றத்தில் குடும்பம் மற்றும் குற்றவியல் வழக்குகள் விசாரிக்கப் பட்டு வந்தது. இந்த நீதிமன்றத்தின் மூன்றா வது தளத்திலுள்ள கழிவறைக்குள் திடீ ரென பயங்கர சத்தத்துடன்  குண்டுவெடிப்பு நிகழ்ந்தது.  இதில் இருவர் சம்பவ இடத்தி லேயே உயிரிழந்தனர். மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டதில் மேலும் ஒருவர் உயிரிழந்தார். 20 பேர் படுகாயங்களு டன் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். காவல்துறையினர் மீட்புப்பணிகளில் ஈடு பட்டு வருகின்றனர். இந்த சம்பவத்திற்கு கடு மையான எதிர்ப்பு தெரிவித்து வழக்கறி ஞர்கள் அங்கு போராட்டத்தில்ஈடுபட்டுள்ளனர்.  காவல்துறை அதிகாரிகள் அங்கு விசாரணை யை தொடங்கியுள்ளனர். மேலும், மாநிலம் முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கைகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன.