tamilnadu

img

கோயிலும் நிறுவனம்தான்: இழப்பீடு கோரிய வழக்கில் தொழிலாளர் ஆணையர் உத்தரவு

சென்னை, ஜூலை 3- பணி நேரத்தில் காவலாளி மரண மடைந்தற்காக இழப்பீடு கோரிய வழக்கில், கோயில் என்பது நிறுவனம் தான் என்று தொழிலாளர் இழப்பீட்டு ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.   திருவல்லிக்கேணி தீர்த்த பலீஸ்வரர் கோயிலில் காவலாளி பணி யில் இருந்த பாபு என்பவர் 2021 ஜூன் மாதம் மர்ம நபர்களால் கொலை செய் யப்பட்டார். இதையடுத்து, கணவரின் மரணத்திற்கு இழப்பீடு கோரி பணியாளர் இழப்பீட்டு ஆணையரிடம் பாபுவின் மனைவி ஸ்ரீதேவி மனு கொடுத்தார். இந்த மனு தொழிலாளர் இழப்பீட்டு இணை ஆணையர்-1 பா.மாதவன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த இணை ஆணை யர் இந்த மனுவுக்கு பதில் தருமாறு தீர்த்தபலீஸ்வரர் கோயில் நிர்வா கத்திற்கு உத்தரவிட்டார். அதன்படி, தீர்த்தபலீஸ்வரர் கோயில் செயல் அதிகாரி பதில் மனு தாக்கல் செய்தார்.

இந்த விசாரணை நிலுவையில் உள்ள நிலையில், கோயில் செயல் அதி காரி புதிய இடையீட்டு மனுவை தாக்கல் செய்தார். அதில், கோயில் என்பது நிறு வனம் அல்ல. தொழில் அல்லது வர்த்த கம் மேற்கொள்ளும் இடமும் அல்ல. எனவே, இந்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல என்று கூறப்பட்டிருந்தது. இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, தேவி தரப்பு வழக்கறிஞர், கோயில் பணியில் இருந்தபோதுதான் பாபு மரணமடைந்துள்ளார் என்று கோயில் செயல் அதிகாரியின் பதில் மனு தெளிவு படுத்தியுள்ளது என்றார். திருநெல்வேலி நெல்லையப்பர் கோயில் வழக்கில் கோயில் என்பது நிறுவனம்தான் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை கடந்த 2014ல் தெரிவித்து ள்ளது என்று வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட தொழிலாளர் இணை ஆணையர், கோயில் பணி யாளர்கள் பணிக்கொடை சட்டத்தின் கீழ்தான் வருகிறார்கள் என்று உச்ச நீதிமன்றம் 1981ல் தெளிவு படுத்தியுள்ளது. கோயில் என்பது நிறுவனம்தான். எனவே, கோயில் செயல் அதிகாரி தரப்பில் கோயில் நிறு வனம் அல்ல என்று தாக்கல் செய்யப் பட்டுள்ள இடையீட்டு மனு ஏற்கக்கூடி யதல்ல. மனு தள்ளுபடி செய்யப்படு கிறது என்றார்.