tamilnadu

உயர்நீதிமன்றத்தில் தலைமை கன்னியாஸ்திரி இடையீட்டு மனு தாக்கல்

மதுரை, ஜன. 28-  தஞ்சை பிளஸ்-2 வகுப்பு மாணவி லாவண்யா  தற்கொலை வழக்கில் இமாகுலேட் ஆர்ட் மேரி சபையின் தலைமை கன்னியாஸ்திரி  ரோசரி  உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வெள்ளிக்கிழ மையன்று இடையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். திருச்சியைச் சேர்ந்த சிஸ்டர் ரோசரி உயர்நீதி மன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: இமாகுலேட் ஆர்ட் மேரி சபையின்  தலைமை கன்னியாஸ்திரியாக உள்ளேன். இந்தியாவில் 1844 ஆம் ஆண்டு  துவங்கப்பட்டது. 1945 ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட சொசைட்டியாக உள்ளது. இந்த சொசைட்டிக்கு தமிழகத்தில் கிட்டத்தட்ட 90 கல்வி நிறுவனங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதேபோல் முதியோர்கள் இல்லம் ,சிறப்பு பள்ளி உட்பட நூற்றுக்கணக்கான உதவி  மையங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் தஞ்சை மாவட்டம் மைக்கேல் பட்டி கிராமத்தில் 1923ஆம் ஆண்டு பள்ளி தொடங்கப்பட்டு இன்றுவரை நடைபெற்று வரு கிறது. இதில் 700-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்வேறு மதங்களைச் சேர்ந்தவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 9ஆம் தேதி மாணவி லாவண்யா எதிர்பாராதவிதமாக உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவருக்கு அன்று முதல்  உதவி சிகிச்சை செய்யப்பட்டு உடனடியாக அவர்  அவருடைய வீட்டுக்கு அனுப்பப்பட்டார். இந்நிலையில் 16ஆம் தேதி மாலை காவல் துறையின் மூலமாக மாணவி லாவண்யா விஷம் அருந்திய தகவல் கிடைத்தது. 19ஆம் தேதி மாணவி இறந்துவிட்டார். இந்த வழக்கில்  சிஸ்டர் சகாயமேரி கைது செய்யப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் மாணவியின் தந்தை முருகா னந்தம் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற  கோரி வழக்குத் தாக்கல் செய்துள்ளார். வழக்கில் எங்கள் விடுதியில் மாணவியை இந்து மதத்திலிருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மாறச்  சொன்னதாகவும் கூறியுள்ளார். ஆனால் நாங்கள் நடத்தக்கூடிய பள்ளிகளில் இதுபோன்ற எந்தவிதமான மதமாற்றமும் நடை பெறுவதில்லை. எந்த மாணவர்களையும் அது போன்று நடத்துவதும் இல்லை. ஆகையால் இந்த வழக்கில் நான் இடை யீட்டு மனு தாக்கல் செய்துள்ளேன். இந்த வழக்கில் ரகசிய மனுவும் தாக்கல் செய்துள்ளேன். இந்த மனு சீலிடப்பட்ட கவரில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளேன். இந்த மனு  முருகானந்தம்,  அவரது குடும்பத்தின ரையும் விமர்சிக்கும் விதமாக குற்றம் சாட்டும் விதமாக கிடையாது. எங்களை சார்ந்த நிறுவ னத்தின் மீது அவதூறான கருத்துக்கள் வைக்கப் பட்டுள்ளதால் மட்டுமே இந்த மனு தாக்கல் செய்துள்ளேன் .இந்த வழக்கில் எங்களையும் இடையீட்டு மனுதாரராக இணைத்து விசாரணை நடத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.