tamilnadu

img

சென்னையில் மாநில அளவில் தர்ணா

திருச்சிராப்பள்ளி, ஜூலை 17 - தமிழ்நாடு கூட்டுறவு வங்கி ஊழியர் சம்மேளன (BEFI-CBEF) மத்தியக் குழு கூட்டம் மாநில தலைவர் தி.தமிழரசு தலைமையில் திருச்சியில் புதனன்று நடைபெற்றது. மாநில பொதுச் செயலாளர் சர்வேசன், திருச்சி மாவட்டத் தலைவர் ரகுராமன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.  கூட்டத்தில், தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி மற்றும் 23 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளை இணைத்து தமிழ்நாடு வங்கி உருவாக்க வேண்டும். 127 நகர கூட்டு வங்கிகளை மண்டல அளவில் இணைத்து பலப்படுத்த வேண்டும்.  நகர கூட்டுறவு வங்கியில் புகுத்தப்பட்டுள்ள V.Soft மென்பொருளில் உள்ள குறைபாடுகளை விரைந்து தீர்த்து வங்கிகளை பாதுகாத்திட வேண்டும். மேலும் ஒப்பந்த புள்ளி கோராமல் வங்கியியல் நடவடிக்கைகளுக்கு உகந்ததாக இல்லாத மென்பொருளைத் தன்னிச்சையாக தேர்வு செய்து அமல்படுத்தியுள்ள அதிகாரிகளின் மீது மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநில மற்றும் நகர கூட்டுறவு வங்கி ஊழியர்களின் ஊதிய உயர்வு ஆணையை விரைந்து வெளியிட வேண்டும். கூட்டுறவுத் துறை அமைச்சர் ஏற்றுக்கொண்ட மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்களின், நிலுவையில் உள்ள ஊதிய உயர்வு பிரச்சனைகளை கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் விரைந்து தீர்த்திட வேண்டும். கடந்த நிதியாண்டுக்கான போனஸ் மற்றும் கருணைத்தொகை மிகுதி 10 சதவீதத்தை, பதிவாளர் ஏற்றுக் கொண்டபடி உடனே அளிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்ட் மாதத்தில் சென்னையில் மாநில அளவில் ஒரு நாள் தர்ணா நடத்துவது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநில துணைத்தலைவர் ராஜகேசி நன்றி கூறினார்.