tamilnadu

img

‘என்னை கருணைக் கொலை செய்து விடுங்கள்’

திருவாரூர், மார்ச் 19 - முதுகலை பொறியியல் (மெக்கா னிக்கல்) படிப்பில் 80 சதவீதத்திற்கும் மேல் மதிப்பெண் பெற்று சாதித்த இந்த  இளைஞர் தனது வாழ்க்கை முடங்கிப் போனதால் “என்னை கருணைக் கொலை செய்து விடுங்கள்” என தமிழக  முதலமைச்சரை உருக்கமுடன் வேண்டு கிறார். இந்த இளைஞரின் துயரமான இன்றைய நிலை குறித்த பதிவு இது. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப் பூண்டி நகராட்சி 1 ஆவது வார்டு மன் னார்குடி சாலையில் வசித்து வரும் விவசாயியான செல்வராஜ் (58) - மோ கனா (52) தம்பதியரின் கடைசி மகன் எஸ்.கபில் (28). இவர் பொறியியல் துறையில் மெக்கானிக்கல் பிரிவில் 85 சதவீதத்திற்கு அதிகமான மதிப்பெண் கள் பெற்றுள்ளார்.

2014 - 2018 வரை சென்னையில் அம்பத்தூர் எஸ்டேட் பகுதியில் மாதம் 15 ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் வேலை செய்துள்ளார். இவரது வாழ்க்கை யில் 2019 ஆம் ஆண்டு ஜூலை 8 ஆம் தேதி அதிகாலை பெரும் துயரமான சம்பவம் நடந்துவிட்டது. வழக்க மாக படுக்கையில் இருந்து எழ முற்பட்ட வரால் கை, காலை அசைக்க முடிய வில்லை. இடுப்பு பகுதியில் இருந்து செயல்பாடின்றி முடங்கிவிட்டது.  அதிர்ச்சி அடைந்துபோன அவரது பெற்றோர்கள் தொடர்ந்து சிறப்பான சிகிச்சைக்கு ஏற்பாடு செய்து பரா மரித்து வந்தனர். ஆனாலும் எந்த முன்னேற்றமும் இல்லை. சென்னை, பெங்களூர் என பெருமுயற்சி எடுத்து, சுமார் 20 லட்சம் ரூபாய் வரை  செலவு செய்துள்ளனர். எந்த மருத்துவ ராலும் பாதிப்பின் காரணம் குறித்து  அறிய முடியாத நிலையில் கைவிட்டு விட்டனர்.  இதனால் செய்வதறியாது தவிக்கும் பெற்றோர் வீட்டிலேயே வைத்து அவரை பராமரித்து வருகின்றனர்.  

தனக்கு ஏற்பட்ட துயரம் குறித்து சமூக வலைதளத்தில் ‘என்னை கருணை கொலை செய்து விடுங்கள்’ என்று பேசி  வீடியோவாக வெளியிட்டார். மாவட்ட ஆட்சியருக்கும் கோரிக்கை மனு ஒன்றை அனுப்பி வைத்தார். மாவட்ட  ஆட்சியர் கபிலை தொடர்பு கொண்டு ஆறுதல் கூறி, குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தி தரு வோம்; அரசின் மூலம் சிறந்த மருத்து வம் கிடைக்க ஏற்பாடு செய்வோம் என்று கூறியதாக பாதிக்கப்பட்ட கபில் கூறு கிறார்.  இந்த பின்னணியில் கபில் கூறுகை யில், எனக்கு முதல்வர் நல்ல மருத்துவம் கொடுப்பதற்கும் ஓரளவு குணமாகி எனது பணியை நானே செய்து கொள்கின்ற அளவிற்கு உடல்நிலை தேறி வருவதற்கும் உதவிட வேண்டும். மேலும் எனது 100 சதவீத வாழ்க்கை முடக்கத்தை கணக்கில் கொண்டு ஒரு குறிப்பிட்ட தொகையை மாதந்தோறும் உதவியாக வழங்க வேண்டும் என உருக்கமுடன் கோரிக்கை விடுத்தார். வாழ்வை இழந்து படுக்கையில் முடங்கி கிடக்கும் கபிலை மக்கள் பிரதி நிதிகள் நேரடியாக சந்தித்து அவருக்கும் அவரது குடும்பத்திற்கும் தேவையான உதவிகளை செய்திட வேண்டுமென இப்பகுதி மக்கள் கேட்டுக் கொண்டுள் ளனர்.  தமிழக முதல்வர் நிச்சயம் உதவிடு வார் என்ற செய்தியை எதிர்பார்த்து இந்த குடும்பத்தினர் கவலையுடன் காத்திருக்கின்றனர்.

- எஸ்.நவமணி