திருச்சிராப்பள்ளி, மே 23- அரசுப் பணிகளில் ஒப்பந்த முறை கூடாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வலியுறுத்தினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் நிதியளிப்புப் பொதுக்கூட்டம் திருச்சிராப்பள்ளி மாவட்டம் திரு வெறும்பூரில் நடைபெற்றது. கூட்டத் தில் கலந்துகொண்டு அவர் பேசிய தாவது: திருநங்கைகளுக்கு குறைந்தபட்ச வாழ்க்கை உத்தரவாதம், அதற்கான திட்டங்களை அரசு நிறைவேற்ற வேண்டும். திருநங்கைகளுக்கு சுய தொழிலுக்கான வங்கிக்கடன், வீட்டு மனைப் பட்டா வழங்கவேண்டும். இதன் மூலம் திருநங்கைகளை தவறாகப் பார்க்கும் பார்வையை போக்க முடியும். தமிழகம் முழுவதும் உள்ள திருநங்கைகளைக் கணக்கெ டுத்து அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டி குடியமர்த்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தக்கோரிக்கை களை தமிழக அரசிடம் வலியுறுத்தி பெற்றுத்தருவோம். மோடி ஆட்சிக்கு வந்தால் இந்தியா வல்லரசாக மாறிவிடும் என்றார்கள். சர்வதேச நிறுவனம் ஒன்று 126 நாடு களில் கணக்கெடுத்ததில் மிக அதிகமாக பட்டினியில் மக்கள் வாழும் நாடு இந் தியா எனக் கூறியுள்ளது.
திருக்கோவில்களை அழிக்கும் மோடி
நாட்டில் தொழில்துறையை வளர்க்க வேண்டும். பொதுத்துறை களைப் பாதுகாக்க வேண்டும். பொதுத் துறை தான் நாட்டின் திருக்கோவில். இன்று, மோடி ஆட்சி அனைத்துப் பொதுத் துறைகளையும் அழித்து வருகிறது. பாஜகவின் ஒரே கொள்கை விரல் விட்டு எண்ணக்கூடிய முதலாளிகளுக் கான நாடாக இந்தியா இருக்க வேண் டும் என்பதுதான். மற்றொருபுறத்தில், மத அடிப்படை யில் மக்களைப் பிரிக்கும் மோசமான செயலை செய்து கொண்டிருக்கிறது. மக்கள் விரோத, தொழிலாளர் விரோத கொள்கைகளைக் கடைப்பிடிக்கும், மத அடிப்படையில் மக்களைப் பிரிக்கும் இவர்கள் 2024- தேர்தலில் தோற்கடிக்கப்படுவார்கள். திமுக அரசு தேர்தல் வாக்குறுதி களை நிறைவேற்றிக் கொண்டிருக்கி றது. மற்ற வாக்குறுதிகளையும் நிறை வேற்ற வேண்டும்.
விழுப்புரம் சாராய மரணங்கள்
விழுப்புரம் மாவட்டத்தில் விஷச் சாராயத்தால் 22 பேர் இறந்துள்ளனர். சிறு வயதிலேயே பெண்கள் விதவை யாகி உள்ளனர். கள்ளச்சாராயத்தை அடியோடு ஒழிக்கும் நடவடிக்கை யில் அரசு தீவிரமாக ஈடுபட வேண்டும். கள்ளச்சாராய குற்றவாளிகளுக்கு பின்புலமாக இருந்த காவல்துறை யினர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும். போதைப் பொருட்கள் விஷ யத்தில் தயவு, தாட்சண்யமின்றி முதல் வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளிகல்வித் துறையின் செயல் பாடுகள் பாராட்டக்கூடியவை. அதே நேரம் தனியார் பள்ளிகளுக்கு சரி யான கட்டணத்தை தீர்மானிக்க வேண் டும். அதிக கட்டணம் வசூலிக்கும் பள்ளி கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். நகராட்சி, பேரூராட்சிகளில் யாரை வேலைக்குச் சேர்த்தாலும் அவர்களை ஒப்பந்த முறையில் தான் சேர்ப்போம் என்று அறிவிக்கப்பட் டுள்ளது. அரசுப் பணியிலும் ஒப்பந்தமுறையில் தான் ஆட்களை சேர்க்க வேண்டுமென அரசு அறிவித்துள்ளது. அரசுப் பணிகளில் ஒப்பந்தமுறை கூடாது. அரசுப் பணியில் சேர்பவர்களுக்கு கால வரைமுறை நிர்ணயித்து அவர் களை பணிநிரந்தம் செய்யவேண்டும். இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் பேசினார்.
ரூ.19 லட்சம் வளர்ச்சி நிதி
திருவெறும்பூர் தாலுகா செயலா ளர் மல்லிகா தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மாவட்டக்குழு உறுப்பினர் தெய்வநீதி வரவேற்புரை நிகழ்த்தினார். புறநகர் மாவட்டச் செயலாளர் ஜெயசீலன், மாவட்டச் செயற் குழு உறுப்பினர்கள் பழனிச்சாமி, சிவ ராஜ், லெனின், மாவட்டக்குழு உறுப்பி னர் முருகேசன் ஆகியோர் பேசினர். முன்னதாக, கூட்டத்தில் கட்சி வளர்ச்சி நிதியாக ரூ.19 லட்சத்து 50ஆயி ரத்தை புறநகர் மாவட்டச் செயலாளர் ஜெயசீலன், ஒன்றியச் செயலாளர் மல்லிகா, மாவட்டச் செயற்குழு உறுப்பி னர்கள் பழநிசாமி, சிவராஜ் ஆகி யோர் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணனிடம் வழங்கினர். மாவட்டச் செயற்குழு, மாவட்டக் குழு உறுப்பினர்கள், இடைகமிட்டிச் செயலாளர்கள், கட்சி உறுப்பினர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண் டனர். தாலுகாகுழு உறுப்பினர் ரவிக் குமார் நன்றி கூறினார். தஞ்சை தியாகி என்.வி.கலைக் குழுவினரின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.