tamilnadu

img

கோடை நெல் அறுவடை நிறைவடைகிறது திருப்திகரமான மகசூல் கிடைத்துள்ளதாக தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் தகவல்

கோடை நெல் அறுவடை நிறைவடைகிறது திருப்திகரமான மகசூல் கிடைத்துள்ளதாக தஞ்சாவூர் மாவட்ட விவசாயிகள் தகவல்

தஞ்சாவூர், ஜூன் 22 - தஞ்சாவூர் மாவட்டத்தில் கோடை நெல் அறுவடை நிறைவடை யும் தருவாயில் உள்ளது. எதிர்பார்ப்பு களை விட அறுவடை சற்று குறை வாக இருந்தாலும், நல்ல மகசூல் கிடைத்துள்ளதாக விவசாயிகள் தெரி வித்துள்ளனர். அதிகாரப்பூர்வ தரவு களின்படி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் (TNCSC) நடப்பு அறு வடை காலத்தில் இதுவரை 70,000 டன் நெல் கொள்முதல் செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மார்ச் 31 வரை விதைக்கப்பட்ட அல்லது நடவு செய்யப்பட்ட நெல் கோடை பயிரின் ஒரு பகுதியாகக் கரு தப்படும் நிலையில், வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறையின் கூற்றுப்படி, இந்த ஆண்டு கோடை நெல் பருவத்தில் 45,000 ஏக்கர் பரப்ப ளவில் பயிரிடப்பட்டது. இது பருவத்தில் வழக்கமாக மேற்கொள்ளப்படும் பரப்ப ளவை விட 7,500 ஏக்கர் அதிகமாகும். சுமார் 42,000 ஏக்கரில் அறுவடை ஏற்க னவே முடிந்துவிட்டது. இன்னும் 3,000 ஏக்கர் மட்டுமே பாக்கி உள்ளது. இன்னும் சில நாட்களில் அறுவடை நிறைவடைந்துவிடும். மேலும் மகசூல் புள்ளிவிவரங்கள் மிதமான வெற்றி யைக் காட்டுகின்றன என செய்திகள் வெளியாகியுள்ளன.

45 மூட்டைகள் எதிர்பார்ப்பு

இதுதொடர்பாக ஒரத்தநாட்டைச் சேர்ந்த விவசாயியும், தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் பொதுச் செய லாளருமான சாமி.நடராஜன் கூறுகை யில், “ஒரத்தநாட்டில் விவசாயிகள் ஒரு ஏக்கருக்கு 60 கிலோ கொண்ட 30 முதல் 36 மூட்டைகள் வரை நெல் பெறுகின்றனர். சில பகுதிகளில் 40 மூட்டைகள் வரை கிடைத்துள்ளன. இது திருப்திகரமான விளைச்சல்தான். ஆனால் பெரும்பாலான விவசாயிகள் ஒரு ஏக்கருக்கு 45 மூட்டைகள் வரை எதிர்பார்த்தனர்” என அவர் கூறினார். அதே போன்று சாமி.நடராஜன் கூற்றை மையப்படுத்தி தஞ்சாவூர் மாவட்டம் முழுவதும் ஏக்கருக்கு சராசரி யாக 37 முதல் 43 மூட்டைகள் வரை  மகசூல் கிடைக்கும் என்று வேளாண் துறை அதிகாரிகளும் உறுதிப்படுத்தி னர். இது எடையில் ஏக்கருக்கு 2,160 முதல் 2,400 கிலோ வரை ஆகும். இது கடந்த ஆண்டு ஏக்கருக்கு 1,800 முதல் 2,000 கிலோ விளைச்சலுடன் ஒப்பிடும்போது முன்னேற்றம் என்பது குறிப்பிடத் தகுந்த விஷயம் ஆகும். தஞ்சாவூரில் செயல்படும் 214 நேரடி கொள்முதல் மையங்கள் (DPCs) மூலம் நெல் கொள்முதல் மேற் கொள்ளப்படுகிறது. அதனால் செப்ட ம்பர் 1ஆம் தேதி குறுவை கொள்முதல் பருவத்தின் தொடக்கத்தில் கொள்முதல் 2.5 லட்சம் முதல் 3 லட்சம் டன்களை எட்டும் என்று தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகள் எதிர்பார்க்கின்றனர்.