tamilnadu

img

பேருந்தில் மாணவர்கள் ஆபத்தான பயணம்: போக்குவரத்துக் கழகம் எச்சரிக்கை

சென்னை, பிப். 9- அரசு பேருந்துகளில் ஆபத்தான  முறையில் பயணம் மேற்கொள்ளும் மாணவர்கள் மீது பேருந்து ஓட்டு நர்களும், நடத்துநர்களும் புகார் அளிக்கலாம் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. அரசு பேருந்துகளில் இளை ஞர்கள் ஆபத்தான முறையில் பய ணம் செய்வதால் விபத்துக்கள் ஏற்படுகிறது என பரவலாக கருத்து நிலவுகிறது. இந்நிலையில் பேருந்தில்  பயணிக்கும் மாணவர்களின் பாது காப்பை உறுதி செய்யும் வகையிலும், அவர்கள் பாதுகாப்பாக பயணம் செய்வதற்கான நிலையான இயக்க நெறிமுறைகள் குறித்தும் ஓட்டுநர், நடத்துநர்களுக்குச் சுற்றறிக்கை மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகரப் போக்கு வரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், அரசு பேருந்துகளில் மாணவர்கள் படிக்கட்டுகளில் பயணம் செய்வது தொடர்கிறது. மாணவர்கள் இவ்வாறு உயிருக்குப் பாதுகாப்பற்ற முறையில் பயணிக்க முற்பட்டால் பேருந்தைச் சாலையோரம் நிறுத்தி, முறையற்ற பயணத்தைத் தவிர்க்க மாணவர்களை அறிவுறுத்த வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மேலும் ஓட்டுநர்கள், நடத்துநர்க ளின் அறிவுரையை மாணவர்கள் கேட்காமல் செயல்பட்டால், காவல்  நிலையம் அல்லது மாநகர போக்கு வரத்துக் கழகத்திற்குத் தகவல்  தெரிவித்து அவர்கள் மீது புகார்  அளிக்கலாம் எனக் குறிப்பிடப் பட்டுள்ளது. பேருந்துகளில் பள்ளி,  கல்லூரி மாணவர்களின் பாதுகாப் பான பயணத்தை உறுதி செய்வது ஓட்டுநர், நடத்துநர்களின் பொறுப்பு எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது