சேலம், ஜன.15- நாமக்கல் கிளை சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த மாற்றுத் திறனாளி அடித்துக் கொலை செய் யப்பட்டதாக கூறி அவரது உறவி னர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம், கருப்பூர் ஆதி திராவிடர் தெருவைச் சேர்ந்தவர் பிரபா கரன். மாற்றுத் திறனாளியான இவர், நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் காவல்நிலையத்தில் பதிவான வழக்கு தொடர்பாக கடந்த ஜன.11 ஆம் தேதி யன்று கைது செய்யப்பட்டார். இதன் பின் அவர் நாமக்கல் கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலை யில், அவருக்கு உடல்நிலை பாதிக் கப்பட்டதால் நாமக்கல் அரசு மருத்து வமனையில் சிகிச்சைக்கு அனு மதிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச் சைக்காக சேலம் அரசு மருத்துவமனை யில் காவல்துறையினரால் அனு மதிக்கப்பட்டுள்ளார். ஆனால், சிகிச்சை பலனின்றி வெள்ளியன்று இரவு உயிரிழந்துள்ளார். இந்நிலையில், காவல்துறையினர் தாக்குதலின் காரணமாக பிரபாகரன் உயிரிழந்ததாக கூறி அவரது உறவி னர் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல் போராட் டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து மாவட்ட ஆட்சியர் செ.கார்மேகம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் நாமக்கல் சரோஜ்குமார் தாகூர், சேலம் ஸ்ரீஅபிநவ் ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது, சேந்தமங்கலத்தை சேர்ந்த காவல் துறையினர் கடந்த மூன்று நாட்களாக சட்டத்திற்கு விரோதமாக மாற்றுத்திறனாளியான பிரபாகரனை அடைத்து வைத்து தாக்கி யதன் காரணமாகவே அவர் உயிரிழந் துள்ளார். ஆகவே, இவரின் உயிரிழப் பிற்கு காரணமான காவல் துறையி னரை தற்காலிக பணிநீக்கம் செய்ய வேண்டும். உயிரிழந்தவரின் குடும்பத் தினருக்கு உரிய இழப்பீடு மற்றும் அவ ரது மனைவிக்கு அரசு பணி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது. இதனை கேட்டறிந்த மாவட்ட ஆட்சி யர் செ.கார்மேகம், இக்கோரிக்கைகள் குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக் கப்படும் என்றார். இருப்பினும், மேற் படி காவல் துறையினர் மீதான பணி நீக்க ஆணையை பார்த்த பின்னரே பிர பாகரனின் உடலை பெற்றுச் செல் வோம் என போராட்டத்தில் ஈடுபட் டோர் உறுதிபட தெரிவித்தனர். இத னால் அங்கு பெரும் பதற்றமான சூழல் நிலவியது. மாற்றுத்திறனாளிகள் சங்கம் போராட்டம் இதற்கிடையே, காவல் துறையி னரால் சட்டவிரோதமாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த மாற்றுத்திற னாளி பிரபாகரன் மரணத்திற்கு நீதி கேட்டு தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாது காப்போர் உரிமைகளுக்கான நலசங் கத்தின் மாவட்ட பொருளாளர் ஹரி ஹரன் தலைமையில் கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை நுழைவாயில் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மாற் றுத்திறனாளிகள் சங்க மாவட்ட துணை தலைவர் எம்.கனகராஜ், மாவட்டக்குழு உறுப்பினர் அமலா ராணி, சிபிஎம் மாவட்ட செயலாளர் மேவை.சண்முக ராஜா, வாலிபர் சங்க மாவட்ட பொரு ளாளர் ஜெகநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.