tamilnadu

காணொலி காட்சி விசாரணை நிறுத்தம்

சென்னை, மார்ச் 2 - கொரோனா தொற்று பரவலையடுத்து, சென்னை உயர் நீதிமன்றம் காணொலி காட்சி மற்றும் நேரடி விசாரணை மூலம் வழக்குகளை விசாரித்து வருகிறது. தற்போது தொற்று பாதிப்பு பெருமளவில் குறைந்துள்ளது.இந்நிலையில், தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி தலைமையிலான அமர்வு வழக்கு விசாரணையின் போது, நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் முன்  வைத்த வாதங்களை கேட்க முடியாத வகையில் இடையூறு ஏற்பட்டதாக  அரசுத்தரப்பில் ஆஜராகியிருந்த கூடுதல் தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார்.இதைக் கேட்ட தலைமை நீதிபதி, காணொலி மற்றும்  நேரடி விசாரணை மேற்கொள்ளும் போது, இணையதள தொடர்பு  உள்ளிட்ட பல சிக்கல்களை எழுவதாக சக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.  எனவே, மார்ச் 7 முதல் காணொலி காட்சி விசாரணை முறையை நிறுத்த  உள்ளது. காணொலி காட்சி விசாரணை கோரும் மூத்த வழக்கறிஞர்க ளுக்கு மட்டும் அந்த வசதி அளிக்கப்படும் என்றார்.