கடலூர்,ஜுன் 27- கடலூரில் குமார், ஆனந்தன் சிலை திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. சிபிஎம் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு சிலை யினை திறந்து வைத்தார். கடலூர் புதுப்பாளையத்தில் கள்ளச்சாரா யத்தை எதிர்த்து போராட்டம் நடத்தியதற்காக வாலிபர் சங்க தோழர்கள் குமார், ஆனந்தன் ஆகி யோரை சாராய வியாபாரிகள் 25 ஆண்டுகளுக்கு முன்பு வெட்டி படுகொலை செய்தனர். அவர்களு டைய 25வது ஆண்டு நினைவு தினம் திங்கள் கிழமை அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் குமார்,ஆனந்தன் படிப்ப கத்தில் அவர்களுடைய மார்பளவு சிலை வைக்கப் பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது. சிலை யினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் திறந்து வைத்தார். பின்னர் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் குமார்,ஆனந்தன் ரத்ததானகழகத்தின் சார்பாக கடந்த ஓராண்டில் அதிகபட்ச ரத்தம் கொடுத்த கொடையாளர்களுக்கு பாராட்டு நிகழ்ச்சி மற்றும் 400 பள்ளி மாணவர்களுக்கு நோட்டு, புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. குமார், ஆனந்தனுடன் களப் போராட்டத்தின் போது உடன் இருந்தவர்களும் குமாரின் தாய் சாவித்திரி, ஆனந்தனின் சகோதரர்கள் கவுரவிக் கப்பட்டனர். நிகழ்ச்சிக்கு மாநகர செயலாளர் ஆர். அமர்நாத் தலைமை தாங்கினார். கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன், மாவட்டச் செயலாளர் கோ.மாதவன், மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.ஜி.ரமேஷ் பாபு, மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் எம்.மருத வாணன், வி.சுப்புராயன், ஜே.ராஜேஷ் கண்ணன், ஆர்.ரவிச்சந்திரன், மாவட்ட குழு உறுப்பினர் ஆர்.ஆளவந்தார், டி.கிருஷ்ணன், எஸ்.கே.பக்கி ரான், வாலிபர் சங்க மாநில துணைச் செயலாளர் செல்வராஜ், மாவட்ட செயலாளர் வினோத், அறி வியல் இயக்க மாவட்ட செயலாளர் தாமோ தரன், நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த மணிமாறன், மகி, பூபதி, ராஜசேகர், குடியிருப்போர்சங்க தலைவர் வெங்கடேசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர். தமிழ்நாடு அறிவியல் இயக் கத்தின் கலைக்குழுவின் கலை நிகழ்ச்சி நடை பெற்றது.