திருநெல்வேலி, ஏப்.11- பாளையங்கோட்டை தியாக ராஜநகர் ஏஜி ஹாலில் செவ் வாய்க்கிழமை நகர்ப்புற உள்ளாட்சி உறுப்பினர்களுக் கான மாநில பயிலரங்கம் தொடங்கியது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் க. ஸ்ரீராம் வரவேற்று பேசினார்.சென்னை மாநகராட்சி கவுன்சிலர் ஜெயராமன், மதுரை மாநகராட்சி துணை மேயர் டி.நாகராஜன், பழனி நகராட்சி துணைத் தலை வர் கந்தசாமி,கொல்லங்கோடு நகராட்சி கவுன்சிலர் லலிதா ஆகி யோர் தலைமை தாங்கினர். காந்தி கிராம பல்கலைக்கழக பேராசிரியர் க.பழனித்துரை பயி லரங்கத்தை துவக்கி வைத்தார்.தமிழகத்தில் உள்ளாட்சி ஜன நாயகம் நமது கடமைகள் என்ற தலைப்பில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசினார். நகர்ப்புற உள்ளாட்சி பணிகள் மற்றும் நகரமயமாதல் சவால் கள் என்ற தலைப்பில் மாநில செயற்குழு உறுப்பினர் என்.குண சேகரன் பேசினார். புதனன்று 2 ஆவது நாள் பயிலரங்கத்தில் சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர் கே.ஜி.பாஸ்க ரன் பேசுகிறார். அதனைத் தொட ர்ந்து உள்ளாட்சி பிரதிநிதிகள் கருத்துரை ஆகியவை நடைபெற உள்ளது. சிபிஎம் அரசியல் தலை மைக் குழு உறுப்பினர் ஜி. ராம கிருஷ்ணன் நிறைவுரையாற்று கிறார். நெல்லை மாநகராட்சி 55 ஆவது மாமன்ற உறுப்பினர் முத்து சுப்பிரமணியன் நன்றி கூறுகிறார்.