மக்களவையில் சு.வெங்கடேசன் வலியுறுத்தல்
புதுதில்லி, டிச. 6 - 2011ஆம் ஆண்டே அறிவிக்கப் பட்டு, தமிழகத்தில் 116 ஏக்கர் நில மும் ஒதுக்கீடு செய்யப்பட்ட மதுரை நைபர் (தேசிய மருந்துசார் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கழகம்) கல்வி நிறுவனத்தை உடனடியாக துவக்கிட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன், மக்களவையில் வலியுறுத்தினார். தேசிய மருந்துசார் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கழக மசோதா திங்களன்று மக்களவையில் விவாதத்திற்கு வந்தது. இந்த விவாத த்தில் பங்கேற்று சு.வெங்கடேசன் பேசியதாவது: ‘NIPER’ எனும் தேசிய மருந்து சார் கல்வி மற்றும் ஆராய்ச்சிக் கழகம் சம்பந்தப்பட்ட இந்த மசோதா வில் முதலிலே என்னுடைய அதிர்ச்சி யை பதிவு செய்யக் கடமைப்பட்டிருக் கிறேன். இன்றைக்கு மாமேதை அம்பேத்கர் அவர்களுடைய நினைவு நாள். நாடே அவருடைய பங்களிப்பை போற்றிக் கொண்டிருக்கிற இந்த நேரத்தில் NIPER (நைபர்) கவுன்சிலில் எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு இடம் ஒதுக்க வேண்டும் என்று நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்துள்ளது. ஆனால் நிலைக்குழுவினுடைய பரிந்துரையை ஏற்க மறுத்து தலித் மற்றும் பழங்குடியினருக்கான இடத்தை இந்த மசோதா உறுதிப் படுத்தவில்லை என்பது கடும் அதிர்ச்சியை உருவாக்குகிறது. அப்படியென்றால் நாடாளுமன்ற நிலைக்குழு எதற்கு கூட்டப் படுகிறது. அதன் கருத்துக்கு என்ன மரியாதை வழங்கப்படுகிறது என்ற கேள்வி எழுகிறது.
இடஒதுக்கீடு மறுப்பு
அதேபோல எல்லா உயர்கல்வி ஆராய்ச்சி நிறுவனங்களிலும் அறிவின் பெயரைச் சொல்லி இடஒதுக்கீட்டை மறுப்பதை வழக்க மாகக் கொண்டிருக்கிறது இந்த அரசு. அதையே இந்த மசோதா விலும் செய்திருக்கிறது. அதேபோல சிறுபான்மை மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை - அடித் தட்டு மாணவர்களின் கல்வி உத வித்தொகை உள்ளிட்ட விஷயங் களைப் பற்றி இந்த மசோதா பேச மறுக்கிறது. இவை எல்லாம் ஒரு உயர்கல்வி ஆராய்ச்சி நிறுவனத் தில் சமூகநீதியை உறுதிப்படுத்து வதிலே இருந்து தவறுகிற ஒரு செயல் என்பதை இங்கே பதிவு செய்கிறேன். அதேபோல ஒன்றிய ஆட்சி யாளர்கள் மீண்டும் மீண்டும் பழம்பெருமையை வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் பேசிக் கொண்டிருப்பார்கள். புராண காலத்திலேயே பிளாஸ்டிக் சர்ஜரி இருந்தது என்று சொல்வார்கள். பழம்பெருமை என்பது வேறு. நம்முடைய மரபு என்பது வேறு. மர புக்கும் பெருமைக்கும் வித்தியாசம் இருக்கிறது. கால் நீட்டி உட்கார்ந்து பழைய கதையை பேசிக் கொண்டி ருப்பது பழம்பெருமை. பெருமை மக்கும். ஆனால் மரபு மக்காது. அது புதிய தலைமுறைக்கு புதிய அறிவைக் கொடுத்துக் கொண்டே இருக்கும்.
தமிழ் மருத்துவம்...
முக்கியமாக தமிழ் மருத்துவத்தைப் பற்றி - சித்த மருத்துவத்தைப் பற்றிச் சொன்னால் எட்டா யிரம் மூலிகைகளுக்கு மேல் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஒரு மகத்தான மருத்துவ அறிவை விஞ்ஞானப் பூர்வமாக நிரூபித்தவர்கள். உடல் வளர்த்தேன், உயிர் வளர்த்தேனே என்று உடலை மையப்படுத்திய ஒரு அறி வியல் தத்துவம். தாவரங்களிலே துவங்கி தாதுக்கள், கனிமங்கள் வரை மருத்துவத்திற்கு பயன்படுத்திய முதல் மருத்துவ மரபு தமிழ் மருத்துவ மரபான சித்த மருத்துவ மரபு என்பதை நான் இங்கு பதிவு செய்ய கடமைப்பட்டி ருக்கிறேன். ஆனால் இந்த தேசிய மருந்துசார் கல்வி ஆராய்ச்சிக் கழகம்(நைபர்) இந்திய மருத்துவத்தை பேச மறுக்கிறது. தமிழ் மருத்துவத்தை பேச மறுக்கிறது.
‘திங்க் இன் இந்தியா’
இன்றைக்கு சர்க்கரை நோயாளிகளின் தலைமையகமாக இந்தியாவை சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் அதற்கு நம்முடைய மருத்துவ மரபிலே இருந்து எதைக் கண்டுபிடித்து இருக்கிறோம் என்பது ஒரு பெரிய கேள்வி. மேக் இன் இந்தியாவைப் பற்றி பிரதமர் அடிக்கடி பேசுகிறார். திங்க் இன் இந்தியா மிக முக்கியமானது. கடந்த 10 ஆண்டுகளில் நைபர் (NIPER) மூலமாக வெறும் 40 கண்டுபிடிப்புகள் நிகழ்த்தப் பட்டு காப்புரிமை உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது. ஆனால் இந்திய மரபிலே பல்லாயிரம் நோய்க் கூறு பற்றிய குறிப்பும், அதற்கான மருத்துவ மேற்கோளும் இருக்கிறது.
மதுரை ‘நைபர்’ என்னாயிற்று?
அதேபோல மிக முக்கியமாக 2011 ஆம் ஆண்டு நம்முடைய 8 வது நிதிக்குழுவினால் உறுதிப் படுத்தப்பட்டு 8 (NIPER) நைபர்கள் உறுதிப் படுத்தப்பட்டன. அந்த 8 கல்வி நிறுவனங்களில் ஒன்று தமிழகத்தில் மதுரையில் அமையும் என்று அன்றைய ஒன்றிய அமைச்சரவையும் உறுதி படுத்தியது. ஆனால் இந்த 8 நிறுவனங்களில் 7 உடனடியாக துவங்கப்பட்டது. எட்டாவது நிதிக்கமிசனிலும் அன்றைய அமைச்சரவை யிலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட மதுரை நைபருக்கு மட்டும் எந்த நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட வில்லை. இன்றைக்கு வரை ஏறக்குறைய 12 ஆண்டுகளாக எதுவும் நிகழவில்லை. நைபர்க்கு 100 ஏக்கர் நிலம் தர வேண்டும். எந்த மாநில அரசும் 100 ஏக்கர் நிலம் தர வில்லை. தமிழக அரசு மட்டும் தான் மதுரையில் திருமோகூரில் 116 ஏக்கர் நிலத்தைக் கொடுத்தது. கொடுத்து எட்டாண்டுகள் ஆகிவிட்டது. இன்றைக்கு வரை நைபர் துவக்கப்படவில்லை. மதுரையிலே எய்ம்ஸ் அறிவிக்கப்பட்டு ஒரு செங்கல்லோடு நிற்கிறது. இரண்டாவது செங்கலுக்கு இத்தனை ஆண்டுகள் நாங்கள் போராடிக் கொண்டிருக்கிறோம். அதேபோல நைபர் மாறிவிடக் கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.
நைபர்க்கு 100 ஏக்கர் நிலம் தரவேண்டும். எந்த மாநில அரசும் 100 ஏக்கர் நிலம் தரவில்லை. தமிழக அரசு மட்டும்தான் மதுரையில் திருமோகூரில் 116 ஏக்கர் நிலத்தைக் கொடுத்தது. கொடுத்து எட்டாண்டுகள் ஆகிவிட்டது.