மதுரை,டிச.30 - மதுரை மாவட்டம் அலங்கா நல்லூரில் உள்ள சர்க்கரை ஆலை யில் அரவையை உடனே துவங்கிடக் கோரி தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆலை முன்பு தொடர் போராட்டம் நடைபெற்று வருகிறது. கரும்பு விவசாயிகளின் போராட்ட த்திற்கு ஆதரவு தெரிவித்து டிசம்பர் 30 வியாழனன்று அலங்காநல்லூரில் வணிகர்கள் கடைகளை அடைத்துள்ள னர். மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை யில் இந்த ஆண்டுக்கான அரவை இன்னும் துவங்கப்படாமல் உள்ளது. அரவையை துவங்கிடக் கோரி டிசம்பர் 14 அன்று கரும்பு விவசாயி கள் சங்க மாநிலத் தலைவர் என்.பழனிச்சாமி தலைமையில் துவங்கிய காத்திருக்கும் போராட்டம் டிசம்பர் 30 வியாழக்கிழமையன்று 17 ஆவது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த போராட்டத்தில் கரும்பு விவ சாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் கரு.கதிரேசன், அலங்காநல்லூர் ஒன்றியச் செயலாளர் என்.ஸ்டாலின் குமார், கரும்பு விவசாயிகள் சங்க நிர்வாகிகள் பி.போஸ், ராம்ராஜ், பெரு மாள், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் எஸ்.முருகன் உட்பட கரும்பு விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் கே.ராஜேந்திரன், தமிழ்நாடு விவ சாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எஸ். பி.இளங்கோவன், மதிமுக கொட்டா ம்பட்டி ஒன்றியச் செயலாளர் அ.ஈஸ்வ ரன் ஆகியோர் ஆதரித்துப் பேசினர். கரும்பு விவசாயிகளின் போராட்ட த்தில் அலங்காநல்லூர் வணிகர் சங்கத் தினர் மற்றும் பெரிய ஊர்சேரி உள்ளிட்ட சுற்றுவட்டார கிராம மக்கள், பெண்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு ஆத ரவு தெரிவித்து வருகின்றனர். வணிகர்கள் வியாழனன்று ஒரு நாள் அலங்காநல்லூர் பகுதியில் கடைகளை அடைத்து தங்களது ஆதரவினை தெரிவித்தனர்.