tamilnadu

ஸ்ரீநகர் பயங்கரவாத தாக்குதல்: மு.க.ஸ்டாலின் கண்டனம்

சென்னை,டிச.14- ஸ்ரீநகரில் காவல் வாகனம் மீது  நடந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவத் திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் கண்டனம் தெரிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீர், ஸ்ரீநகர் புறநகரில் உள்ள செவான் என்ற இடத்தில் காவல் முகாம் அருகே காவல் பேருந்து மீது  பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில், ஆயுதம் ஏந்திய 2 காவலர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், படுகாயமடைந்த 12  பேர் மருத்துவமனையில் அனுமதிக் ்கப்பட்டனர். இதில் கவலைக்கிடமாக இருந்த வீரர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால், பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்திற்கு தமிழக  முதல்வர் மு.க.ஸ்டாலின்  கண்டனம் தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து அவர்குறிப்பிடுகையில், “ஸ்ரீநகர் அருகே காவல் பேருந்து மீது பயங்கரவாத தாக்குதல் நடந்ததை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். இந்த  கொடூரமான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கிறேன். வீரமரணம் அடைந்த  பாதுகாப்புப் படை வீரர்களின் குடும்பங்க ளுக்கு எனது இதயப்பூர்வமான இரங்க லைத் தெரிவித்துக் கொள்கிறேன். காய மடைந்த மற்ற வீரர்கள் விரைவில் குணம டைய வாழ்த்துகிறேன்”என்று பதிவிட்டி ருந்தார்.

;