tamilnadu

தமிழகம், கேரளத்திலிருந்து மும்பைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்

தமிழகம், கேரளத்திலிருந்து மும்பைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்

சென்னை, மார்ச் 2 - ஹோலி பண்டிகையை முன்னிட்டு தமிழகம் மற்றும்  கேரளத்திலிருந்து மும்பைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப் பட உள்ளன.  இதுகுறித்து தெற்கு ரயில்வே சனிக்கிழமை வெளியிட்ட  செய்திக் குறிப்பில், “மும்பையிலிருந்து மார்ச் 6, 13 ஆகிய  தேதிகளில் மாலை 4 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்.01063), மறுநாள் இரவு 10.45-க்கு திருவனந்தபுரம் (கொச்சுவேலி) சென்றடையும். மறுமார்க்கமாக, திரு வனந்தபுரத்திலிருந்து மார்ச் 8, 15 ஆகிய தேதிகளில் மாலை 4.20-க்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்.01064), மறுநாள் நள்ளிரவு 12.45-க்கு மும்பை சென்றடையும். இந்த ரயில் தானே, சங்மேஸ்வர், ரத்னகிரி, சிந்துதுர்க், மட கோன், உடுப்பி, மங்களூர், காசர்கோடு, கண்ணூர், கோழிக் கோடு, திருச்சூர், எர்ணாகுளம், கோட்டயம், செங்கனூர், கொல்லம் வழியாக இயக்கப்படும். மும்பையிலிருந்து மார்ச் 9,16 தேதிகளில் நள்ளிரவு 12.20-க்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்.01005), செவ்வா யன்று பிற்பகல் 12.15-க்கு கன்னியாகுமரி வந்தடையும். மறு மார்க்கமாக, கன்னியாகுமரியிலிருந்து மார்ச் 11,18 தேதிகளில் பிற்பகல் 2.15-க்கு புறப்படும் சிறப்பு ரயில் (எண்.01006), வியா ழனன்று அதிகாலை 4.15-க்கு மும்பை சென்றடையும். இந்த ரயில் தாதர், தானே, கல்யாண், புனே, கிருஷ்ணா,  ராய்ச்சூர், குண்டக்கல், கடப்பா, ரேணிகுண்டா, திருத்தணி,  காட்பாடி, வேலூர், திருவண்ணாமலை, திருக்கோவிலூர், விழுப்புரம், விருத்தாச்சலம், அரியலூர், திருச்சி, திண்டுக்கல்,  மதுரை, விருதுநகர், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளி யூர் வழியாக இயக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.