tamilnadu

img

பத்திரிகையாளர்களுக்கான சிறப்பு பயிற்சி’ செய்தி மக்கள் தொடர்புத்துறை

பத்திரிகையாளர்கள் தங்களது துறை சார்ந்த தொழிற்தகுதியை மேம்படுத்திக்கொள்வதற்கும், திறன்மேம்பாட்டை அதிகரிக்கவும், மொழித் திறன் மற்றும் நவீன தொழில் நுட்பத்தில் சிறந்து விளங்கவும் ‘பத்திரிகையாளர்களுக்கான சிறப்பு பயிற்சி’ செய்தி மக்கள் தொடர்புத்துறை சார்பில் சென்னை கலைவாணர் அரங்கில் புதனன்று(மே3) நடைபெற்றது. செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் துவக்கி வைத்து பேசினார். தமிழ் வளர்ச்சி செய்தித்துறை செயலாளர் மரு. இரா. செல்வராஜ், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் த.மோகன், ஓய்வு பெற்ற நீதிபதி கே. சந்துரு, மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர் டி.கே.எஸ். இளங்கோவன், தமிழ் இணைய கல்விக் கழக இணை இயக்குநர் ரெ. கோமகன், மூத்த பத்திரிகையாளர் கோலப்பன் உள்ளிட்டோர் உரையாற்றினர். தமிழ்நாடு முழுவதிலிருந்தும் பத்திரிகையாளர்கள் இதில் கலந்து கொண்டனர்.