தருமபுரி சிஐடியு அலுவலகத்தில் பொது வேலை நிறுத்த சிறப்பு பேரவை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிஐடியு மற்றும் இடைக்கமிட்டிகள் சார்பில், சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசனிடம் 150 தீக்கதிர் சந்தாக்கள் வழங்கப்பட்டன. சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் ஜி.நாகராஜன், மாவட்டச் செயலாளர் சி.நாகராசன், மாவட்ட பொருளாளர் ஏ.தெய்வானை, சிபிஎம் மாவட்டச் செயலாளர் ஏ.குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் வே.விசுவநாதன் ஆகியோர் பங்கேற்றனர்.