திருவண்ணாமலை, ஜூலை 16- சாலைப் பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை, பணிக்காலமாக முறைப் படுத்தி ஆணை வழங்க வேண்டும் என, திரு வண்ணாமலையில் நடைபெற்ற சிறப்பு மாநாடு தமிழக அரசை வலியுறுத்தியுள்ளது. திருவண்ணாமலை அடுத்த வேங்கிக்கா லில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கத்தின் 8 ஆவது மாநில சிறப்பு மாநாடு ஜூலை 15,16 (வெள்ளி,சனி) ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்றது. கடந்த 17.9.2000 அன்று கல்வித்தந்தை காமராஜர் பிறந்த விருது நகரில் தோற்று விக்கப்பட்ட இந்த சாலைப்பணியாளர்கள் சங் கம், தமது சங்கப் பணிகள் மட்டுமின்றி, இரத்த தானம், உடல் உழைப்பு தானம், மரக்கன்றுகள் நட்டு, இயற்கையை பாதுகாப்பது உள்ளிட்ட சமூக நல பணிகளையும் செய்து வந்தது. முந் தைய தமிழக அரசின் தவறான கொள்கை களால் கடந்த 2002 ஆம் ஆண்டு, 10 ஆயி ரம் சாலை பணியாளர்கள் பணி நீக்கம் செய் யப்பட்டனர். பணி நீக்கத்திற்கு எதிராக வலு வான போராட்டங்களை நடத்தி பறிக்கப்பட்ட பணியை மீட்டது இந்த இயக்கம்.
இந்த மாநாட்டில், பல்வேறு அமைப்பு களை சேர்ந்த ஆளுமைகள் பங்கேற்று, சங்கத் தின் வளர்ச்சி மற்றும் எதிர்கால இயக்கங்கள், திட்டங்கள் குறித்து கருத்துரை வழங்கினர். நெடுஞ்சாலை துறையில் காலியாக உள்ள சாலைப் பணியாளர் பணியிடங்களில் கிரா மப்புற இளைஞர்களுக்கு வேலை வழங்க வேண்டும், சாலைப் பணியாளர்களின் பணி நீக்கத்தின் போதும், பணிக்காலத்திலும் உயிரி ழந்தோரின் வாரிசுகளுக்கு கருணை அடிப்ப டையில் பணி நியமனம் விரைந்து வழங்க வேண்டும்,சாலைப் பணியாளர்களுக்கு தொழில் நுட்பக் கல்வி திறன் பெறாத ஊழி யருக்கான ஊதிய மாற்றம் ரூ.5,200, ரூ.20,200 தர ஊதியம் ரூ.1,900 வழங்க வேண்டும், சாலைப் பணியாளர்கள் கடுமையான பணி களை மேற்கொண்டு வருவதை கணக்கில் கொண்டு, ஊதியத்தில் 10 விழுக்காடு ஆபத்துப்படி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முதல் நாளன்று துவக்கவிழாவில் சங்கத் தின் கொடியை மாநிலத் தலைவர் மா.பால சுப்பிரமணியன் ஏற்றி வைத்தார். அரசு ஊழி யர் சங்க கொடி மாநில பொதுச் செயலாளர் ஆர்.செல்வம் ஏற்றி வைத்தார். அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனத்தின் கொடி யை மாநில தலைவர் மு.அன்பரசு ஏற்றி வைத் தார். மாநில பிரதிநிதித்துவ மாநாட்டிற்கு மாநி லத் தலைவர் மா.பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாநில துணைத் தலைவர் து.சிங்க ராயன் அஞ்சலி தீர்மானம் வாசித்தார். வரவேற்பு குழுத் தலைவர் எஸ். பார்த்திபன் வரவேற்றார்.
அரசு ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலா ளர் ஆர். செல்வம் துவக்கி வைத்து உரையாற்றி னார். அதனைத் தொடர்ந்து சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆ.அம்சராஜ் வேலை அறிக்கை யை சமர்ப்பித்தார். மாநிலப் பொருளாளர் இரா. தமிழ் வரவு-செலவு அறிக்கையை சமர்ப்பித் தார். மாநில துணைத் தலைவர்கள் ச.மகேந்தி ரன், டி .ராஜமாணிக்கம், கா. ரவி, பே.முத்து, மாநிலச் செயலாளர்கள் செ.சையது யூசுப் ஜான், சு.செந்தில் நாதன், கு.பழனிச்சாமி,கோ. ஹரி பாலகிருஷ்ணன், மா. மகாதேன் ஆகி யோர் தீர்மானங்கள் முன்மொழிந்தனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில தலை வர் மு. அன்பரசு நிறைவுரையாற்றினார். மாநில பொருளாளர் பச்சமுத்து, தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்க பொதுச் செய லாளர் எஸ். பாரி, தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர்கள் சங்க மாவட்டத் தலைவர் கோ. ஸ்ரீதர், தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூ தியர் சங்க மாவட்டச் செயலாளர் சி. சுப்பிர மணியன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் க.பிரபு, தமிழ்நாடு சாலை ஆய்வாளர்கள் சங்க பொதுச் செய லாளர் டி.திருமுருகன், தமிழ்நாடு நெடுஞ் சாலை துறை ஓட்டுநர்கள் சங்க மாவட்டத் தலைவர் எம். மாரியப்பன், தமிழ்நாடு சத்து ணவு ஊழியர் சங்க மாநிலத் துணைத் தலை வர் கே. அண்ணாதுரை ஆகியோர் வாழ்த்திப் பேசினர். வரவேற்பு குழு செயலாளர் ஏ .ஏழு மலை நன்றி கூறினர்.
ஊர்வலம்-பொதுக்கூட்டம்
தொடர்ந்து சனிக்கிழமை (ஜூலை 16) திரு வண்ணாமலை வட்டாட்சியர் அலுவலகம் அரு கிலிருந்து துவங்கிய பேரணியில், சாலை பணியாளர்கள் குடும்பப் பெண்கள், குழந்தை கள் என ஏராளமானோர் கலந்து கொண்ட னர். அரசு ஊழியர் சங்க மாவட்ட பொருளா ளர் மு.பாஸ்கரன் ஊர்வலத்தை துவக்கி வைத்தார். பேரணியின் முடிவில் நடந்த பொது மாநாட்டிற்கு, மாநிலத் தலைவர் மா.பால சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். வர வேற்பு குழு தலைவர் சு.பார்த்திபன் வரவேற் றார். தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை பொறி யாளர்கள் சங்க மாநிலத் தலைவர் எஸ்.கண்ணன், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநி லத் தலைவர் மு.அன்பரசு உள்ளிட்ட பலர் உரை யாற்றினர். மாநிலச் செயலாளர் மா.மகா தேவன் நன்றி கூறினார்.