மதுரை புறநகர் மாவட்டம் சோழவந்தானில் சைக்கிள் பயணக்குழுவிற்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.பாலபாரதி உரையாற்றினார். வாலிபர் சங்க மாநிலத் தலைவர் என்.ரெஜீஸ்குமார், முன்னாள் மாவட்டச் செயலாளர் உமா மகேஸ்வரன், மாவட்ட செயலாளர் எஸ்.கார்த்திக், மாவட்டத் தலைவர் தமிழரசன், சிபிஎம் வாடிப்பட்டி ஒன்றிய செயலாளர் வேல்பாண்டி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.