tamilnadu

தீக்கதிர் முக்கிய செய்திகள்

நடிகர் ஸ்ரீகாந்த் கைது

சென்னை: சென்னை நுங்கம்பாக்கம் பார் ஒன்றில் நடந்த தகராறில் அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் உட்பட 9  பேர் கைது செய்யப்பட்டனர். அவருக்கு கொக்கைன் போதைப் பொருள் கொடுக்கும் வெளிநாட்டைச் சேர்ந்த ஜான் என்ப வருடன் இருக்கும் தொடர்பு தெரிய வந்தது. மேலும் விசா ரித்த போது, இடைத்தரகர் பிரதீப் கொடுத்த வாக்குமூலத்தில், தடை செய்யப்பட்ட கொக்கைன் போதைப்பொருளை 40  முறை நடிகர் ஸ்ரீகாந்த் வாங்கியதாக கூறியுள்ளார். இதைத்  தொடர்ந்து, ஸ்ரீகாந்த்தை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்ற நுங்கம்பாக்கம் காவல்துறை யினர் ரத்த மாதிரி பரிசோதனை நடத்தினர். இதில், அவர்  போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதியானது. இதைத்  தொடர்ந்து அவரை காவல்துறையினர் கைது செய்துள்ள னர். இந்த விவகாரத்தில் மேலும் ஒரு சில நடிகர்களுக்கு தொடர்பு இருப்பதும் தெரிய வந்திருக்கிறது.

 செந்தில்பாலாஜி சகோதரர் மனு

சென்னை: மருத்துவ சிகிச்சைக்கு அமெரிக்கா செல்ல அனுமதி கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி யின் சகோதரர் அசோக் குமார் மனு அளித்தார். மனுவின் மீது  விசாரணை நடத்திய சென்னை முதன்மை அமர்வு நீதி மன்றம், ஜூன் 30 ஆம் தேதி பதிலளிக்க அமலாக்கத் துறைக்கு உத்தரவிட்டுள்ளது.

உச்ச நீதிமன்றம் பாராட்டு

சென்னை: இணையதள மோசடி வழக்கில் குண்டர் சட்டத்தை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்த மேல்முறை யீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், சைபர் குற்றவாளி களுக்கு எதிராக வழக்கமான சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்  பதிவு செய்வது பலனளிக்கவில்லை என்பதால், குண்டர் சட்டத்தை பயன்படுத்துவது வரவேற்கத்தக்கது எனக்கூறி தமிழ்நாடு அரசுக்கு பாராட்டு தெரிவித்திருக்கிறது.

சிங்கமுத்துவுக்கு அபராதம்

சென்னை: தன்னைப் பற்றி நடிகர் சிங்கமுத்து அவ தூறாக பேசியதற்காக ரூ.5 கோடி நஷ்ட ஈடு கேட்டு நடிகர் வடி வேலு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த அவதூறு வழக்கின்  விசாரணையின் போது, “வடிவேலுக்கு எதிராக இனிமேல் அவதூறு கருத்தை தெரிவிக்க மாட்டேன்” என்று சிங்க முத்து தரப்பில் உத்தரவாதம் அளித்து மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, ஒருதலை பட்சமாக வழங்கப் பட்ட தடை உத்தரவை நீக்கி சிங்கமுத்துவுக்கு ரூ.2,500 சென்னை உயர்நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.

50 பேருக்கு பணி நியமன ஆணை

சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியா ளர் தேர்வாணையத்தின் வாயிலாக இளநிலை  உதவியாளர், தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் ஆகிய பணியிடங்களுக்கு தெரிவு  செய்யப்பட்ட 50 நபர்களுக்கு தலைமைச் செய லகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திங்க ளன்று பணி நியமன ஆணைகளை வழங்கி னார். இந்நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் தா.மோ.அன்ப ரசன், தலைமைச் செயலாளர் நா.முருகானந் தம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பாமக எம்எல்ஏ நீக்கம்

சென்னை: பாமக நிறுவனர் ராம தாசுக்கும், தலைவர் அன்புமணிக்கும் நடந்து  வரும் மோதலின் அடுத்த கட்டமாக, சேலம்  மேற்கு மாவட்ட பாமக செயலாளர் பொறுப் பில் இருந்து வந்த மேட்டூர் தொகுதி எம்எல்ஏ சதாசிவம் நீக்கப்பட்டு, புதிய செய லாளராக ராஜேந்திரனை நியமனம் செய்து உள்ளார் ராமதாஸ்.

வழக்கு  ஒத்திவைப்பு

சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கில் திமுக  எம்.பி ஆ.ராசா உள்ளிட் டோர் சென்னை சிறப்பு  நீதிமன்றத்தில் திங்கள் கிழமை (ஜன.23) ஆஜரா கினர். வருமானத்திற்கு அதிகமாக ரூ.5.53 கோடி  சொத்துகள் சேர்த்ததாக 2015 இல் ஆ.ராசா மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்திருந்தது. 2023 இல் இந்த வழக்கில் சிபிஐ  குற்றப்பத்திரிகை தாக்கல்  செய்தது. சென்னை எம்.பி, எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதி மன்றத்தில் நடைபெற்று வரும் இந்த வழக்கில் திங்கள்கிழமை குற்றச் சாட்டு பதிவு செய்யப்படும் என நீதிமன்றம் அறி வித்திருந்தது. குற்றச் சாட்டு பதிவு செய்வதற்கு முன், வழக்கில் இருந்து தன்னை விடுக்க வேண் டும் என ஆ.ராசா மனு  அளித்ததால் குற்றச் சாட்டு பதிவு தள்ளி வைக்கப் பட்டது. வழக்கின் அடுத்த  விசாரணை ஜூன் 30  ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

வழக்கு வாபஸ்

சென்னை: சிவாஜி யின் அன்னை இல்லத்தை  ஜப்தி செய்ய பிறப்பித்த  உத்தரவை ரத்து செய் வதை எதிர்த்து தனியார் நிறுவனம் ஒன்று வழக்கு  தொடர்ந்தது. இதைய டுத்து, நடிகர் சிவாஜியின்  பேரன் துஷ்யந்த்துட னான கடன் பிரச்சனை யில் நீதிமன்றத்திற்கு வெளியே தீர்வு காணப்பட்டு விட்டதாக கூறியதால், மேல் முறையீட்டு மனு திரும்பப் பெறப்பட்டது.