tamilnadu

img

மூத்த தோழர் ஆர்.வரதராஜன் 31 ஆவது நினைவு தினம் அனுசரிப்பு

மூத்த தோழர் ஆர்.வரதராஜன்  31 ஆவது நினைவு தினம்  அனுசரிப்பு 

திருவாரூர், ஜுன் 26-  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழர், முன்னாள் குடவாசல் பேரூராட்சி மன்றத் தலைவர் ஆர். வரதராஜனின் 31 ஆவது நினைவு தினம் குடவாசல் சிபிஎம் அலுவலகத்தில் அனுசரிக்கப்பட்டது. களப்போராளி தோழர் ஆர். வரதராஜன் உருவப்படத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.சுந்தரமூர்த்தி மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். நிகழ்ச்சியில் குடவாசல் நகரச் செயலாளர் டி.ஜி.சேகர், ஒன்றியச் செயலாளர் டி. லெனின், மூத்ததோழர்கள் எப். கெரக்கோரியா, எஸ். கிருஸ்துநாதன் மற்றும் ஒன்றிய, நகரக்குழு, மாதர் சங்கம் உள்ளிட்ட வர்க்க வெகுஜன அரங்கத்தின் நிர்வாகிகள், தோழர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.