நாகர்கோவில், மே 31- உலக புகையிலை எதிர்ப்பு தினமாக மே 31ஐ கொண்டாடிகொண்டிருந்த வேளையில் தக்கலை துணை போலீஸ் சூப்பிரண்ட் கார்த்திகேயன் தலைமையிலான தனிப்படை போலீசார் மற்றும் மார்த்தாண்டம் காவல் நிலைய ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பிடித்தது போதை எதிர்ப்பாளர்களிடையே உற்சாகத்தையும், போலீசாரின் துணிச்சல் மிக்க பணிக்கு பாராட்டும் கிடைத்துள்ளது.குமரி மாவட்டத்தில் குட்கா வியபாரம் மறைமுகமாகநடைபெற்று வந்தது. இங்கிருந்து கேரள மாநிலத்துக்கும் அனுப்பப்படுவதாக தெரிகிறது. பல்வேறு தரப்புகளிலிருந்து வந்த புகாரின் பெயரில் கன்னியாகுமரி மாவட்டகாவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாத் இதை இரகசியமாக கண்காணிக்க உத்தரவிட்டார். சில நாட்களுக்கு முன் மார்த்தாண்டம் போலீசார் குட்கா விற்றதாக கூறி இருவரை கைதுசெய்திருந்தனர். இதில் முகமது அலி முன் ஜாமீன்பெற்றார்.இந்நிலையில் தனிப்படை போலீசார் அவரை இரகசியமாக கண்காணித்தனர். பின்பு அவரை பிடித்து இரகசிய இடத்தில் வைத்து விசாரித்தனர். அப்போது திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. மார்த்தாண்டம் பகுதியில் மொத்த வியபார கடை நடத்திவரும் சத்திய நேசன் (65), அவரது மகன் அனந்த் சத்யா (34), அவர்களிடமிருந்து வாங்கி விற்பது தெரியவந்தது. முகமது அலி கொடுத்த தகவலின் பெயரில் தக்கலைதுணை போலீஸ் சூப்பிரண்ட் கார்த்திகேயன் தலைமையிலான தனிப்படை போலீசார் மார்த்தாண்டம் புகையிலை கடையில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது தடை செய்யப்பட்ட ஏராளமான புகையிலை பொருட்கள் இருந்தன. இதை கைப்பற்றிய போலீசார் துருவி துருவிவிசாரணை நடத்தினர். அப்போது வாடகைக்கு எடுத்த இரண்டு குடோன்களில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மூடை, மூடையாக அடுக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டு சீல் வைக்கப்பட்டது. இது எங்கிருந்து வந்தது மற்றும் விற்பனைக்கான நெட்வொர்க் பற்றி போலீசார் புலனாய்வு செய்து வருகின்றனர். கைப்பற்றப்பட்ட குட்கா பொருட்களின் மதிப்பு சுமார் ஒரு கோடியை தாண்டும் என தெரிகிறது. புகையிலை எதிர்ப்புதினத்தில் போலீசாரின் அதிரடி வேட்டை போதை எதிர்ப்பாளர்களிடையே உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.இதேபோன்று மார்த்தாண்டம் கோதேஸ்வரம் பகுதியில்தொழிலதிபர் செல்வராஜ் (45) என்பவருக்கு சொந்தமான குடோன்களில் சோதனை நடத்தி, அங்கும் மூடை மூடையாக