tamilnadu

img

நில நிர்வாக ஆணையர் மூலம் விசாரணை நடத்துக!

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

சேலம், ஜூன் 27- ஓமலூர் வேலுசாமி செட்டியார் பள்ளி அறக்கட்டளை குத்தகை விவசாயிகளை வெளி யேற்றம் செய்து வருவாய்துறை மற்றும் காவல் துறையினர் வீடுகளை இடித்த சம்பவத்தில், நில நிர்வாக ஆணையர் மூலம் விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு விவ சாயிகள் சங்கம் சார்பில் ஓமலூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. சேலம் மாவட்டம், ஓமலூர் வட்டம், ஓமலூர்  ஒன்றியம், எட்டிக்குட்டப்பட்டி ஊராட்சி  செக்காரப்பட்டியில் ஓமலூர் வேலுசாமி செட்டி யார் பள்ளி உள்ளது. இந்தப்பள்ளியின் அறக் கட்டளைக்குச் சொந்தமான 47 ஏக்கர் நிலத்தில் குத்தகை விவசாயிகள் நூறு ஆண்டுகளுக்கு மேலாக சாகுபடி செய்து வருகின்றனர். 

அந்நிலங்களை பள்ளியின் அறக்கட்டளை  சட்டவிரோதமாகவும், குத்தகை விவசாயி களுக்கு தெரியாமலும் 2006ல் ரியல் எஸ்டேட்  நிறுவனத்திற்கு கிரையம் செய்து விற்றுள்ளது. இதனை எதிர்த்தும், பள்ளி அறக்கட்டளை நிலம் பள்ளி வளர்ச்சிக்கே பயன்பட வேண்டும் என்றும் கடந்த 2006 ஆண்டுமுதல் குத்தகை விவசாயிகள் ஓமலூர், திருச்சி, சேலம், சென்னை என வருவாய் மற்றும் உரிமை யியல் நீதிமன்றங்களில் போராடி வரு கிறார்கள். இந்நிலையில், நீதிமன்ற தீர்ப்புகளுக்கு காத்திருக்காமல் ஓமலூர் வட்டாட்சியர் விவ சாயிகளை அகற்ற நடவடிக்கை எடுத்துள் ளார்.  நீதிமன்ற உத்தரவு வரும் வரை அகற்றக் கூடாது என மாவட்ட ஆட்சித் தலைவரி டம் தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர்கள்  மனு அளித்திருந்தனர். ஓமலூர் வட்டாட்சியரி டமும் நேரில் பேசினர். இதற்கிடையில் இறுதி தீர்ப்பு வரும்வரை காத்திருக்காமல் ஓமலூர் வட்டாட்சியர், செக்காரப்பட்டி குத்தகை விவ சாயிகளை அப்புறப்படுத்தியுள்ளனர். இதனால் அந்த நிலத்தில் உள்ள குத்தகை விவசாயிகள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். 

பெ.சண்முகம் கண்டனம்

இதனை கண்டித்து சேலம் ஓமலூரில் திங்க ளன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் பெ.சண்முகம் கண்டன உரையாற்றினார்.  வட்டாட்சியரின் அலட்சியப் போக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ஓமலூர் வட்டத்தலைவர் என்.ஈஸ்வரன் தலைமை யில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில துணைத்தலைவர் பி.டில்லிபாபு, சிபிஎம் மாவட்ட செயலாளர் மேவை.சண்முகராஜா, விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் எ.ராம மூர்த்தி, விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட  செயலாளர் ஜி.கணபதி, மாவட்ட பொருளாளர் எ.அன்பழகன், துணைத்தலைவர்கள் பி.தங்கவேலு, பி.அரியாக்கவுண்டர், விவசாயி கள் சங்க வட்ட நிர்வாகிகள் சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். முன்னதாக ஓமலூர் வட்டாட்சியர் வள்ள முனியப்பனிடம் பாதிக்கப்பட்ட விவசாயி களோடு சங்கத்தின் பொதுச்செயலாளர் பெ.சண்முகம், முன்னாள் சட்டமன்ற உறுப்பி னரும் விவசாயிகள் சங்க மாநில செயலாளரு மான பி.டில்லிபாபு ஆகியோர் பிரச்சனை குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது வட்டாட்சியர் அலட்சியமாக, முன் அனுமதி பெறாமல் வந்துள்ளீர்கள், நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் கூற முடியாது. நீதிமன்ற உத்தரவுபடி நடந்துள்ளோம் என ரியல்எஸ்டேட் நிறுவனத்திற்கான விசு வாசத்தை தலைவர்களிடம் வெளிப்படுத்தி னார். மேலும் ஆக்கிரமிப்பு அகற்ற சம்மந்தப்பட்ட  குத்தகை விவசாயிகளுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது; ஆனால் முகவரி தவறாக இருந்ததால் திரும்பி வந்துவிட்டது எனவும் பொறுப்பில்லாமல் தெரிவித்தார். வட்டாட்சியரின் இந்த அணுகுமுறை மக்கள் சேவகரா ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் பங்கு தாரரா என்கிற ஐயத்தை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக அடுத்தக்கட்ட போராட்டம் நடத்தப்படும் என தலைவர்கள் தெரிவித்தனர்.