மயிலாடுதுறை, மே 3- மயிலாடுதுறை அருகேயுள்ள மாப்படுகை கிட்டப்பா பாலம் அருகில் கட்டப்பட்டு பாதியில் நிறுத் தப்பட்டுள்ள கருமாதி மண்டப பணி யை உடனே துவங்கிட கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பொதுமக்கள் சார்பில் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி யும், ஏந்தியும் மாப்படுகையில் கண் டன போராட்டம் நடைபெற்றது. கட்சியின் ஒன்றியச் செயலாளர் டி.ஜி.ரவி, நகரச் செயலாளர் ஏ.ஆர். விஜய் ஆகியோர் தலைமை வகித்த னர். இந்தப் போராட்டத்தில் மாவட் டச் செயற்குழு உறுப்பினர்கள் ஜி. ஸ்டாலின், எஸ்.துரைராஜ், மாவட் டக்குழு உறுப்பினர்கள் சி.மேக நாதன், ஆர்.ரவீந்திரன், முன்னாள் வட்டச் செயலாளர் எம்.மணி, இயற்கை விவசாயி அ.இராமலிங் கம் உள்ளிட்டோர் கலந்துகொண்ட னர். மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கி நகராட்சி நிர்வா கத்தால் டெண்டர் விடப்பட்டு கரு மாதி மண்டபம் கட்டும் பணி துவக் கப்பட்டது. சிலரின் தூண்டுதல் பெயரில் நகராட்சி நிர்வாகத்தால் அந்த பணி நிறுத்தப்பட்டுள்ளது. இது சம்பந்தமாக பொதுமக்களும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இணைந்து பல கட்ட போராட்டங் கள் நடத்தியும் பலனில்லை. அத னால், மீண்டும் 10.04.2023 அன்று நகராட்சி அலுவலகம் முன்பு முற் றுகை போராட்டம் நடத்தப்பட்டது. போராட்டத்தில் நகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்தால் 1 வாரத்தில் வேலை தொடங்கிவிடும் என்று எழுத்துப்பூர்வமாக உறுதி அளிக் கப்பட்டது. ஆனால், 15 நாட்களைக் கடந் தும் இது வரை எந்த பணியும் துவங்காததால். 20 ஆயிரம் மக்க ளின் நீண்டநாள் கோரிக்கையை அலட்சியப்படுத்துவதாகக் கூறி நகராட்சி மற்றும் மாவட்ட நிர்வா கத்தை கண்டித்தும், எதிர்ப்பு தெரி விக்கும் வகையிலும் கிராமத்தி லுள்ள அனைத்து வீடுகளிலும் கருப்புப் கொடி ஏற்றிய மக்கள் போராட்டத்திலும் திரளாகக் கலந்துகொண்டனர்.