tamilnadu

img

ஜல்லிக்கட்டை காண மாற்றுத்திறனாளிகளுக்கு இருக்கை ஒதுக்க கோரிக்கை

மதுரை, ஜன. 5-  மதுரை மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிகட்டு போட்டிகளை மாற்றுத்திற னாளிகள் பார்ப்பதற்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும்  என்று  வலியுறுத்தி   மாவட்ட ஆட்சியரிடம்  தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளின்  பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டது. சங்கத்தின் மாவட்ட துணைத்  தலை வர் -மாமன்ற உறுப்பினர் டி. குமரவேல் தலைமையில்  மாவட்டத் தலைவர் பி. வீரமணி,  செயலாளர் ஏ. பாலமுருகன், புற நகர் மாவட்டத் தலைவர் கே. தவமணி,  செயலாளர் ப. முருகன், பொருளாளர் கே. சின்ன முருகன் உள்ளிட்டோர்  மாவட்ட ஆட்சியர் எஸ். அனீஷ் சேகரிடம் கோரிக்கை மனு அளித்தனர்,  அம்மனுவில் “மதுரை மாவட்டத்தில் 50 ஆயிரம் மாற்றுத்திறனாளிகள் உள்ள னர், இவர்களுக்கு ஜல்லிக்கட்டு போட்டிகளை பார்வையிட வேண்டும் என்பது  ஆசை, ஆகவே மாற்றுத்திறனாளி கள் அவனியாபுரம், பாலமேடு, அலங்கா நல்லூர் ஆகிய இடங்களில் நடைபெறும் ஜல்லிகட்டு போட்டிகளை பார்க்க மாவட்ட நிர்வாகம் இடம் மற்றும் இருக்கை வசதி கள் செய்து தர வேண்டும்” என்று தெரி வித்துள்ளனர்.