சேலம், மார்ச் 22- கிராம ஊராட்சி செயலாளர்கள் அனைவருக்கும் கரு வூலம் மூலம் ஊதியம் வழங்கக்கோரி சேலத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் தர்ணா போராட் டத்தில் ஈடுபட்டனர். கிராம ஊராட்சி செயலாளர்கள் அனைவருக்கும் கரு வூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சேலம் நாட்டாண்மை கழக கட்டிடம் முன்பு தமிழ்நாடு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை அலுவலர் சங்கம் சார்பில் தர்ணா போராட்டம் நடை பெற்றது. சங்கத்தின் மாவட்ட தலைவர் பி.ஜே.கண்ணன் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில், கிராம ஊராட்சி செயலாளர்கள் அனைவருக்கும் கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும். தேசிய ஊரக வேலை உறுதித் திட்ட கணினி உதவியாளர்கள் அனைவருக்கும் ஏற்கனவே வெளியிடப்பட்ட அரசாணையின்படி இளநிலை உதவியா ளர்களுக்கு இணையான ஊதியம் நிர்ணயம் செய்ய வேண் டும். முழு சுகாதார திட்டவட்டார மாவட்ட ஒருங்கிணைப்பா ளர்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில், சங்கத்தின் மாநில துணைத் தலைவர் திருவரங் கன், மாவட்ட செயலாளர் ஜான் ஆன்ஸ்டீன், மாவட்ட பொரு ளாளர் கோவிந்தராஜ், அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலா ளர் சுரேஷ் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர்.