tamilnadu

img

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சேலம், ஜூன் 12- காவிரி டெல்டா பாசனத்திற்காக, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேட்டூர் அணையில் இருந்து திங்க ளன்று தண்ணீரை திறந்து வைத்தார்.  காவிரி டெல்டா பாசனத்தின் முக்கிய நீர் ஆதாரமாக திகழும் மேட்டூர் அணையில் இருந்து ஆண்டு தோறும் ஜூன் மாதம் 12 ஆம்தேதி குறுவை சாகுபடிக்கு தண்ணீர்  திறக்கப்படும். ஆனால் அணையில் இருக்கும் தண்ணீரின் அளவைப் பொறுத்தும் அணைக்கான நீர் வரத்தைப் பொறுத்தும் அணை திறக்கப்படும் நாள் வேறுபடும். பொதுவாக ஜூன் 12-ஆம் தேதி திறக்கப்படும். இந்த  காலகட்டத்தில் 330 டி.எம்.சி. தண்ணீ ரை பயன்படுத்தி சுமார்  16.50  லட்சம் ஏக்கரில் குறுவை, சம்பா, தாளடி என முப்போகம் பயிர்கள் விளைவிக்கப் படும். பாசனப் பகுதிகளில் மழை பெய் யும் காலங்களில் பாசனத் தேவை குறையும். மேட்டூர் அணையின் வலது கரை யில் நடைபெற்ற நிகழ்ச்சியில், முத லமைச்சர் மு.க.ஸ்டாலின் அணை யின் மேல்மட்ட மதகுகளை இயக்கி  டெல்டா  பாசனத்திற்காக  தண்ணீரை  திறந்து விட்டார். காவிரியை போற்றும் வகையில், ஆற்றில் மலர்களையும் அவர் தூவி வணங்கினார். முதல்கட்ட மாக வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த அளவு  படிப்படியாக 10 ஆயிரம் கன  அடி வரை டெல்டா பாசனத்தின் தேவை யைப் பொறுத்து, திறந்து விடப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்படும். திங்க ளன்று திறக்கப்பட்டுள்ள தண்ணீர், மூன்றரை நாட்களில் 200 கிலோமீட்டர் தூரம் பயணித்து கல்லணையைச் சென்றடையும். மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டதால், டெல்டா விவ சாயிகள் மட்டுமன்றி, காவிரிக் கரை யோரப்பகுதிகளைச் சேர்ந்த மாவட்டங் களைச் சேர்ந்த பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இதனையடுத்து, முதலமைச்சர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “நடப்பாண்டு குறுவை சாகுபடிக்காக ரூ.75.95 கோடி மதிப்பில் சிறப்புத் திட்டங்கள் செயல்படுத்தப்படும். மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்டுள்ள நீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்” என்றார்.  மேலும் பேசுகையில், தமிழ கத்தில் வேளாண் உற்பத்தியை பெருக் கிடும் வகையில் திமுக அரசு பொறுப் பேற்றதில் இருந்து தொடர்ச்சியான முன்னெடுப்பு திட்டங்கள் செயல்படு த்தப்பட்டு வருகின்றன. இரண்டு வருடங்களாக வேளாண்மைத் துறை க்காக தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. கலை ஞரின் அனைத்து கிராம ஒருங்கி ணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தொடர்ச்சியாக 2021 மற்றும் 2022-ஆம் ஆண்டுகளில் குறுவைத் தொகுப்பு திட்டங்கள் அளிக்கப்பட்டதின் வாயி லாக டெல்டா மாவட்டங்களில் சாகுபடி தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  மேலும், மேட்டூர் அணையில் இருந்து குறித்த காலத்தில் தண்ணீர் திறக்கப்பட்டதுடன் கடை மடை வரை  தண்ணீர் சென்றடைவதும் உறுதிப் படுத்தப்பட்டது. இதனால் டெல்டா மாவட்டங்களில் கடந்த 48 ஆண்டு களில் இல்லாத அளவிற்கு 17.76 லட்சம் டன் நெல் உற்பத்தி அதிகரித்துள் ளது. நடப்பாண்டில் குறுவை சிறப்பு  தொகுப்பு திட்டங்களுக்காக ரூ.75.95 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் யூரியா, பொட்டாஷ், டிஏபி  உரங்கள் கையிருப்பு வைக்கப்பட்டுள் ளது. மேலும் வேளாண் கருவிகள் மானி யத்துடன் விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளது. இதனால் 5 லட்சம் ஏக்கராக குறுவை சாகுபடி அதிகரிக்கும் என்றார். இந்நிகழ்வில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், மதிவேந்தன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.