tamilnadu

அகதிகளின் குடிசைகள் எரிந்து நாசம்

டாக்கா, ஜன.10- வங்கதேசத்தில் காடா பகுதியில் அமைக்கப்பட்டிருந்த ரோஹிங்கியா மக்களின் 16வது அகதிகள் முகாமில் ஞாயி றன்று நேரிட்ட பயங்கர தீ விபத்தில் சுமார் 1,200 குடிசைகள் நாசமாகின. தீ விபத்துக் கான காரணம் குறித்து இதுவரை கண்டறியப்படவில்லை. உயிரிழப்பு குறித்தும் தகவல்கள் எதுவும் இல்லை. ஞாயிறன்று மாலை 4.55 மணியளவில், இப்பகுதியில் தீப்பிடித்ததாக தகவல் கிடைக்கப்பெற்றது. அங்கிருந்த அனைத்தும் குடிசை வீடுகள் என்பதால், தீ மளமளவென பரவி, சுமார் 1,200 குடிசைகள் தீக்கிரையாகின என்று காவல்துறையினர் கூறினர்.  சுமார் 4 மணி நேரத்துக்கும் மேல்  போராடி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். ரோஹிங்கியா அகதிகளின் முகாமில் தீ விபத்து நேரிடுவது இது  புதி தல்ல என்று செய்திகள் தெரிவிக்கின்றன.