tamilnadu

img

இராமநாதபுரம்: கொரோனா தொற்று சிகிச்சை ஒத்திகை

இராமநாதபுரம்,ஏப்.12-  இராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் கொரோனா நோய் தொற்று பாதிப்புக்குள்ளா கும் நபர்களை பாதுகாப்புடன் அழைத்து வந்து சிகிச்சை  அளிக்கும் வகையில் ஒத்திகை நிகழ்ச்சி புதனன்று மாவட்ட  ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் நடைபெற் றது. இதில், மருத்துவ கல்லூரி முதல்வர் செந்தில்குமார், கண்காணிப்பாளர் மலர் வண்ணன், சிறப்பு மருத்துவ குழு வினர், செவிலியர்கள் கலந்துகொண்டனர்.   கொரோனா நோய் தொற்றுக்கு உள்ளாகும் நபர்களை  ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து வருபவர்களை பாது காப்பு உடைகளை அணிந்து வந்து மருத்துவர்கள், பணியாளர்கள் தொற்றுக்கு உள்ளாகுபவர்களை பாது காப்புடன் அழைத்து சென்று சிகிச்சை அளிப்படுவது குறித்து ஒத்திகை நடைபெற்றது.  இராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு வருபவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கும் நிலையில்  70 படுக்கை வசதிகள் மற்றும் தீவிர சிகிச்சைக்கான 15 படுக்கைகளும் தயார் நிலையில் உள்ளது. மேலும் ஆக்சி ஜன் போதியளவு பயன்படுத்தும் வகையில் நிமிடத்திற்கு ஆயிரம் லிட்டர் உற்பத்தியாகும் அளவிற்கு உற்பத்தி கலன்  தயார் நிலையில் உள்ளது. மேலும் 11 டன்,தீவிர ஆக்சி ஜன் கலன் தயார் நிலையில் உள்ளன. போதியளவு மருத்துவ உபகரணங்கள், மருத்துவக் கிட்டு, மற்றும்  நோய் தொற்று கண்டறிவதற்கான மருத்துவ பரிசோதனை உபகரணங்கள் போதியளவு இருப்பில் உள்ளது. இத னால் பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை என்று  மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.