tamilnadu

img

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு காலிப்பணியிடங்களை 20 ஆயிரமாக உயர்த்தி கலந்தாய்வு நடத்தி நிரப்பிடுக!

சென்னை, ஜூன் 15-  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணை யம் (டிஎன்பிஎஸ்சி) குரூப்- 4 தேர்வில் காலிப் பணியிடங்களை 20 ஆயிரமாக உயர்த்தி கலந்தாய்வு நடத்தி, காலிப் பணியிடங்களை நிரப்பிட வேண்டுமென வலியுறுத்தி முதல மைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார். முதலமைச்சருக்கு கே.பாலகிருஷ்ணன் அனுப்பிய கடிதம் வருமாறு: கொரோனா தொற்று காரணமாக 2019, 2020, 2021 ஆகிய மூன்று ஆண்டுகளில் டிஎன்பி எஸ்சி மூலம் எந்த தேர்வும் நடைபெற வில்லை. கொரோனா தொற்று குறைந்த பிறகு  கடந்தாண்டு தாங்கள் ஆட்சிக்கு வந்ததற்கு பிறகு டிஎன்பிஎஸ்சி அட்டவணை வெளி யிடப்பட்டு Group -1, Group - 2, Group 2-A,  Group - 4 ஆகிய தேர்வுகள் நடத்தப்பட்டன. Group 4 தேர்வு கடந்த ஆண்டு நடைபெற்றது. அதற்கான தேர்வு முடிவு இந்த ஆண்டு வெளியிடப்பட்டது. Group - 4க்கான காலிப் பணியிடங்கள் 10,117 என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் குறைந்தபட்சம் ஆண்டுக்கு 10 ஆயிரம் என்கிற அளவில் காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வந்தன. கடந்த மூன்று ஆண்டுகளாக கொரோனா தொற்றின் காரணமாக தேர்வுகள் நடத்தப்படா மல், கடந்த ஆண்டுதான் தேர்வு நடத்தப் பட்டு இந்த ஆண்டு தேர்வு முடிவுகள் வெளி யிடப்பட்டன. கடந்த மூன்று ஆண்டுகளில் தேர்வுகள்  நடத்தப்படாத காரணத்திலும், ஓய்வுபெற் றோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாலும், கொரோனா ஊரடங்கு காலத்தில் வேலை வாய்ப்பினை இழந்த இளைஞர்கள் அரசுப் பணிக்கு முயற்சித்து வருவதாலும் போட்டித் தேர்வர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தற்பொழுது விண்ணப்பித்தவர்களின் எண் ணிக்கை 24 லட்சத்திற்கு அதிகமாகவும் தேர்வு எழுதியவர்களின் எண்ணிக்கை 18 லட்சத்திற்கு அதிகமாகவும் உள்ளது.

அரசுப்பணியில் சேர இளைஞர்களுக்கான பிரதான வாய்ப்பாக இருப்பது டிஎன்பிஸ்சி தான். கொரோனா காலத்தில் அறிவிக்கப்படாத பணியிட வாய்ப்புகள் மற்றும் உருவாகி யிருக்கும் கூடுதல் காலிப் பணியிடங்களையும் கணக்கில் கொண்டால் தற்போது மூன்றரை லட்சத்திற்கு மேல் காலிப் பணியிடங்கள் உள்ளன. இதை தற்போது அறிவிக்கப்பட்ட காலிப் பணியிடங்களோடு ஒப்பிட்டுப் பார்த்தால் மூன்று சதவிகிதத்திற்கும் குறை வாகவே உள்ளது என்பதை தங்களது கவ னத்திற்கு கொண்டு வருகிறேன். கடந்த சட்டமன்றக் கூட்டத் தொடரில் தமிழ்நாட்டில் உள்ள பொதுத்துறை நிறு வனங்களான மின்சாரம், போக்குவரத்து, ஆவின் போன்ற துறைகளில் உள்ள காலிப்  பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்பப் படும் என்ற அறிவிப்பு போட்டித் தேர்வுக்கு தயா ராகும் இளைஞர்கள் மத்தியில் மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தியது. ஆனால் சமீபத்தில் குரூப்- 4 தேர்விற்கான காலிப் பணி யிடங்கள் அறிவிக்கப்பட்டதில் பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள காலிப்பணியிடங்கள் இடம் பெறவில்லை என்பது அந்த இளைஞர் களுக்கு ஏமாற்றத்தையும் சோர்வையும் ஏற் படுத்தியுள்ளது. எனவே, தமிழக முதல்வர் , தமிழகத்தில் 3.5 லட்சத்திற்கும் மேல் காலிப் பணியிடங்கள் உள்ள நிலையில், கொரோனா காலத்தில் அறிவிக்கப்படாத பணியிட வாய்ப்புகள் மற்றும் உருவாகியிருக்கும் கூடுதல் காலிப்பணியிடங்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, அனைத்து காலிப் பணியிடங்களை யும் பூர்த்தி செய்யும் வகையில் டிஎன்பிஎஸ்சி தேர்வுகளை எதிர்காலத்தில் நடத்திட வேண்டும். அதேசமயம், தற்போது அறிவிக்கப்பட்டு கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டுள்ள 10 ஆயி ரம் காலிப்பணியிடங்களை குறைந்தபட்சம் 20 ஆயிரம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்  படும் என அறிவித்து அதற்கான கலந் தாய்வை இந்த ஆண்டே நடத்தி தேர்ச்சி பெற்றவர்களுக்கு உடனடியாக பணி வழங்கிட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.