tamilnadu

img

மங்கிக் கொண்டிருக்கும் கொலுசு உற்பத்தி

சேலம் மாவட்டம், வெள்ளிக் கொலுசு உற்பத்திக்கு பெயர் பெற்றது, சேலம் செவ்வாய்ப்பேட்டை, சிவதாபுரம், பனங்காடு, பொன்னம்மாபேட்டை, குகை, இளம்பிள்ளை உள்ளிட்ட 60 கிராம பகுதி களில் வெள்ளி கொலுசு உற்பத்தி அதிகளவில் நடைபெற்று வருகிறது.  இங்கு தயாரிக்கப்படும் வெள்ளிக் கொலுசு கள் ஆந்திரா, மகாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், பீகார், ஜார்க்கண்ட், மேற்குவங்கம் உட்பட நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. சேலம் மாவட்டத்தில் இயங்கி வரும் வெள்ளிக் கொலுசு உற்பத்தியாளர் சங்கத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உறுப்பினராக உள்ளனர். சங்கத்தில் உறுப்பினராக பதிவு செய்யாமல் நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர் கள் குடிசைத் தொழில்போல, வீடுகளில் இருந்து வெள்ளிக் கொலுசு, அரைஞாண் கயிறு, மெட்டி உள்ளிட்டவற்றை உற்பத்தி செய்கின்றனர். வெள்ளிக் கொலுசு உற்பத்தியாளர் சங்கத் தரவுகளின்படி, மாவட்டத்தில் சுமார் 10,000 வெள்ளி கொலுசு உற்பத்தி அலகுகள் உள்ளன, மேலும் சுமார் ஒரு லட்சம் தொழிலாளர்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ வேலை செய்கிறார்கள்.

வெள்ளிக் கொலுசு, மெட்டி, அரைஞாண் கயிறு சேலம் மாவட்ட உற்பத்தியாளர்கள் பிரத்யேகமான முறையில், கலைநயத்துடன் வடிவமைத்துக் கொடுக்கின்றனர். தமிழகம் மட்டுமல்லாமல் பிற மாநிலத்தில் உள்ள தங்க, வெள்ளி நகைக் கடைக்காரர்கள், சேலம் வெள்ளி செயின் உற்பத்தியாளர்களிடம் வெள்ளியை கொடுத்து, அதற்கு மாற்றாக கொலுசு, மெட்டி, அரைஞாண்கயிறாக வாங்கிக் கொள்கின்றனர். கொலுசு தயாரிப்பு பதினாறு கட்டங்களைக் கொண்டது. கம்பி மிஷின், உருக்குக்கடை, மிஷின் பாலிஷ், கைமெருகுக்கடை, பூ மிஷின், பொத்துகுண்டு வளையம் மிஷின், அரும்பு மிஷின், குஷ்பூ பட்டறை, எஸ்.செயின், சாவித்ரி சலங்கை, பட்டை மிஷின், குப்பாமிஷின், கெட்டிப் பூ மிஷின், பொடிமிஷின், கன்னிமாட்டும் மிஷின், லூஸ் பட்டறை! என இவைகளையும் கடந்த பிறகே கொலுசு முழுவடிவம் பெறும். அதற்கு இரண்டு முதல் மூன்று நாட்களாகும். வெள்ளிக் கொலுசில் செம்பு, பித்தளை ஆகியவை ‘சேதாரம்’ என்ற பெயரில் சேர்க் கப்படுகிறது. சேலம் மாநகரில் கைகளால் தயாரிக்கப்படும் வெள்ளிக் கொலுசுகள் 58 கிராம் முதல் 65 கிராம் எடை கொண்டது. நேர்த்தி யான வடிவமைப்பும், கலை நயமிக்க வேலைப் பாடுகள் நிறைந்த, இந்தக் கொலுசுகள் குறைந்தது மூன்று ஆண்டுகள் நீடித்து உழைக்கக் கூடியது.

சில ஆண்டுகளுக்கு முன்னர் வரை சேலத்தில் இருந்து ஒவ்வொரு மாதமும் 50 டன் அளவுக்கு வெள்ளிக் கொலுசு மற்றும் வெள்ளி யிலான ஆபரணப் பொருட்கள் வெளி மாவட்டம், வெளி மாநிலம் மற்றும் வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டு வந்தன. ஆண்டு முழுவதும் சீசன் இல்லாவிட்டாலும் பண்டிகை காலங்களிலும், முகூர்த்தக் காலத்திலும் சேலத்தில் வெள்ளி தொழில் சுறுசுறுப்படையும். ஆனால், தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளி விலையேற்றம், ஜிஎஸ்டி வரி விதிப்பு உள்ளிட்ட காரணங்களால் சேலத்தில் வெள்ளித் தொழிலில் மந்த நிலை நீடித்தாலும், தொழிலாளர்களுக்கு போதுமான பணி வாய்ப்பு பெற்று வருகின்றனர். 1982-ஆம் ஆண்டு தமிழக அரசு வெள்ளி  தொழிலுக்கு வரி விலக்கு அளித்தது. தற்போது, ஜிஎஸ்டி வரி விதிப்பு காரணமாகவும், பண மதிப்பிழப்பு நடவடிக்கையாலும் தொழிலில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஏழை, எளிய மக்களே வெள்ளித் தொழில் உற்பத்தியில் ஈடுபட்டு வருவதால், அவர்களின் வாழ்வாதா ரத்தை கருத்தில் கொண்டு, உற்பத்தி செய்யப் படும் கொலுசுகளை பல்வேறு கட்ட பணிக்காக தொழிலாளர்கள் எடுத்து செல்கின்றனர்.  இந்த நிலையில் கடந்த இரண்டு வாரங்க ளாக ஆர்டர்கள் வெகுவாகக் குறைந்துவிட்டன. 

இதுகுறித்து சேலம் மாவட்ட வெள்ளிக் கொலுசு உற்பத்தியாளர்கள் (கைவினைஞர்கள் சங்கத் (SSAMHA)   தலைவர் சி.ஸ்ரீஆனந்தராஜ், விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் கடும் நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது ஜூன் 1-ஆம் தேதி ஒரு கிலோ. வெள்ளி கட்டி ரூ.66,500க்கும், (ஜூலை 14) வியாழக்கிழமை  கிலோ ரூ.58,000க்கும் விற்பனையானது. மற்றொரு காரணம், பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டதால், பெற்றோர்கள் கல்விக்காக செலவழிக்கிறார்கள். அத்துடன் தமிழ் மாதமான ஆடியில் திருமணங்கள் நடைபெறாது என்பதால்  புதிய ஆர்டர்கள் கிடைக்கவில்லை.  வட இந்தியாவில் ஆஷாட மாதம் ஜூன் 30-ஆம் தேதி தொடங்குகிறது, இந்த மாதம் அசுபமாக கருதப்படுகிறது. “கடந்த இரண்டு வாரங்களாக  25 சதவீத ஆர்டர்களை மட்டுமே பெற்றுள்ளோம். தொழிலாளர்களுக்கு மாதச் சம்பளமாக ரூ.10,000 முதல் ரூ.25,000 வரை வழங்குகிறோம். ஆர்டர் இல்லாவிட்டாலும் சம்பளம் வழங்கியாக வேண்டும். ஆனால், இப்போது வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே வேலை நடைபெறுகிறது.  ஆவணியில் திருமணங்கள் நடைபெறும். ஜூலை 28-ஆம் தேதி ஆஷாட மாதமும் நிறை வடைகிறது, ஆகஸ்ட் இரண்டாவது வாரத்தில் புதிய ஆர்டர்கள் வரும் என்று எதிர்பார்க்கி றோம் என்றார்.