tamilnadu

img

55 ஆயிரம் ஊழியர்களிடம் பிடித்தம் செய்த ரூ.3,462 கோடி எங்கே ?

மதுரை, டிச.19- புதிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஓய்வு பெற்றவர்களுக்கு திட்டப் பயன்களை அளிக்காமல், பிடித்தம் செய்த பணத்தை அளிக்க காலதாமதம் செய்துவருவதாக குற்றம்சாட்டியுள்ள ஓய்வுபெற்ற மின் ஊழியர்கள் , 55 ஆயிரம்  ஊழியர்களிடம் பிடித்தம் செய்த 3,462 கோடி ரூபாய் எங்கே போனது ? என்று கேள்வி எழுப்பியுள்ளனர். தமிழ்நாடு மின்வாரிய ஓய்வுபெற்றோர் நல அமைப்பின் 8 ஆவது மாநில மாநாடு மதுரையில் டிசம்பர் 18 ,19 ஆகிய நாட்களில்  நடைபெற்றது. மாநாட்டின் நோக்கம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைப்பின் பொதுச்செயலாளர் ஜெகதீசன்,  “புதிய ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் ஓய்வு  பெற்ற 54,862  பேருக்கு திட்டப் பயன்களை  அளிக்காமல், பிடித்தம் செய்த ரூ.3,463 கோடி யை அளிக்காமலும்  காலதாமதம் செய்து வருகின்றனர். பிடித்தம் செய்யப்பட்ட பணத்தை ஒன்றிய அரசின் பெரடா நிறு வனத்திடம் செலுத்தாததால் ஓய்வூதியர் களின் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறி நிற்கிறது.

மின்சார வாரியம் 60-ஆம் ஆண்டு நிறைவு விழாவில் 7 ஆயிரம் ஓய்வூதியர் களுக்கு மூன்று சதவீதம் ஆண்டு உயர்வு  வழங்கி 1.12.20215-க்கு முன் ஓய்வு பெற்ற வர்களுக்கு சலுகையும் வழங்கவில்லை. மின்சார வாரியத்தில் 2003-ஆம் ஆண்டுக்கு முன் நிரந்தரப்படுத்தப்பட்டு குறைந்த ஓய்வூதியமோ அல்லது ஓய்வூதியமே பெறாமல் உள்ளவர்களுக்கு அரசாணைப்படி தினக்கூலி பணிக்காலத்தில் பாதியை கணக்கீடு செய்து ஓய்வூதிய திருத்தம் அளிக்க மறுக்கின்றனர். மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தி வருகிற ஜனவரி 20-ஆம் தேதி  மாவட்ட அளவிலும் மார்ச் மாதம்  சென்னை மின்வாரிய அலுவலகம் முன்பும் மாநில அள விலான தர்ணா போராட்டத்தை  தமிழ்நாடு மின்வாரிய ஓய்வுபெற்றோர் நல அமைப்பு நடத்த உள்ளது என்றார். மேலும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும். அறுவை சிகிச்சை செய்து  கொள்ளும் நோயாளிகளின் சிகிச்சைக்கு ஒப்பந்தப்படி முழு செலவுத் தொகையை வழங்க வேண்டும் என்று அரசை  வலியுறுத்தி யுள்ளார்.

போராட்டத்தை தீவிரப்படுத்த வேண்டிய தருணம் 

மாநாட்டின் வரவேற்புக்குழுத் தலை வரும் மதுரை மக்களவை உறுப்பினருமான சு.வெங்கடேசன் பேசுகையில், நாம் போராட்டத்தை தீவிரப்படுத்த வேண்டிய காலம். அடுத்த ஐந்தாண்டுகளில் 40 சதவீதம் முதல் 50 சதவீதம் பேரை அரசுத்துறைகளிலிருந்து வெளியேற்ற  ஒன்றிய அரசு முயற்சித்து வருகிறது. அதற் கான கொள்கைகள் தயாராகி வருகிறது. அதற்கு எதிரான போராட்டத்தை தீவிரப்படுத்த வேண்டிய தருணத்தில் நாம்  உள்ளோம். ரயில்வே நிர்வாகம் மூத்த குடி மக்களுக்கான சலுகை பயணச்சீட்டை இன்னும் வழங்காமல் உள்ளது. விரைவில் அது கிடைக்கும்.  விவசாயிகள் நடத்திய போராட்டத்தில் பாடம் கற்றுக்கொண்டுள்ள மோடி அரசு இந்த நாடாளுமன்றக் கூட்டத்தில் மின்சார திருத்த மசோதாவை தாக்கல் செய்யவில்லை என்று தெரிவித்தார்.