tamilnadu

img

சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு - முதல் 4 இடங்களில் மாணவிகள்!

தமிழ்நாடு அளவில் சென்னை மாணவி ஜீஜீ முதலிடம்

புதுதில்லி, மே 23- ஒன்றிய அரசு நடத்தும்  யுபிஎஸ்சி தேர்வு (2022)  முடிவுகள் வெளியாகியுள் ளது. இதில் தமிழ்நாடு அள வில் பெரம்பூர் மாணவி ஜீஜீ  முதலிடம் பெற்றுள்ளார். முதல் நிலை தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு என மூன்று நிலை களில் இந்த தேர்வு நடத்தப்படும் நிலையில்,  2022 ஜூன் 5 அன்று முதல் நிலைத் தேர்வு நடை பெற்றது. மொத்தம் 5 லட்சத்து 73 ஆயிரத்து 735 பேர் தேர்வில் பங்கேற்றனர். இவர்களில், 13 ஆயிரத்து 90 பேர் வெற்றிபெற்று, 2022 செப்  டம்பரில் நடத்தப்பட்ட முதன்மை எழுத்துத் தேர்வுக்கு தகுதி பெற்றனர். இதில் 2,529 பேர்  எழுத்துத் தேர்வில் வெற்றிபெற்று, நேர்முகத் தேர்வுக்குத் தகுதி பெற்றனர். மே 18 அன்று நேர்முகத் தேர்வு முடிவ டைந்த நிலையில், இவர்களில் 933 பேர் (மாண வர்கள் 613, மாணவியர் 320) தேர்ச்சி பெற்றுள்ள தாக ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணை யம் அறிவித்துள்ளது.

இதில் முதல் 4 இடங்களை மாணவியரே பிடித்துள்ளனர். மேலும், தேர்ச்சி பெற்ற முதல்  25 பேரில் 14 பேர் மாணவியர் ஆவர். மாண வர்கள் 11 பேர். அகில இந்திய அளவில் இஷிதா கிஷோர் முதலிடத்தையும், கரீமா லோஹியா  இரண்டாமிடத்தையும், உமா ஹரதி மூன்றாமி டத்தையும், ஸ்மிருதி மிஸ்ரா நான்காமிடத்தை யும் பெற்றுள்ளனர். தமிழ்நாடு அளவில் சென்னை பெரம்பூ ரைச் சேர்ந்த மாணவி ஜீஜீ முதலிடம் பிடித்  துள்ளார். அவர் யுபிஎஸ்சி தேர்வில் முதல் முயற்சியிலேயே, தமிழ்நாடு அளவில் முதலி டத்தையும் தேசிய அளவில் 107-வது இடத்தை யும் பெற்றுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த ராமகிருஷ்ண சாமி 117-ஆவது இடத்தையும், புதுக்கோட்டையில் துணை ஆட்சியராக பணிபுரிந்து வரும் சர வணன் 147-ஆவது இடத்தையும், அருண் என்ப வர் 426 இடத்தையும், சென்னையை சேர்ந்த  மதிவதனி இராவணன் 447-ஆவது இடத்தை யும், கார்த்திக் என்பவர் 488-ஆவது இடத்தை யும், எழிலரசன் 523 வது இடத்தையும், குடியரசு  என்ற அரசு ஊழியர் 849-ஆவது இடத்தை யும், ராகுல் 858-ஆவது இடத்தையும் பிடித் துள்ளனர். தென்காசியைச் சேர்ந்த சுப்புராஜ் என்ற  மாணவர் தமிழில் எழுதி, அகில இந்திய அள வில் 621-ஆவது இடம் பிடித்து சாதனைப் படைத்துள்ளார். ஒட்டுமொத்தமாக தேர்ச்சி பெற்றவர்களில் 345 பேர் பொதுப் பிரிவைச் சேர்ந்தவர்கள், 99 பேர் பொருளாதார ரீதியாக பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்தவர்கள் ஆவார். 263 பேர்  இதர பிற்படுத்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த வர்கள், 154 பேர் பட்டியல் வகுப்பினர், 72 பேர்  பட்டியல் பழங்குடியினர்.