சென்னை, பிப்.13 - ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரி கோட்டாவில் உள்ள சதீஷ்த வான் விண்வெளி ஆய்வு மையத்தின் முதல் ஏவுதளத் தில் இருந்து திங்கட்கிழமை (பிப்.14) காலை 5:59 மணிக்கு பி.எஸ்.எல்.வி.-சி52 ராக்கெட் விண்ணில் ஏவப் படுகிறது. இந்த ராக்கெட்டில், 1,710 கிலோ எடை கொண்ட ஈ.ஓ. எஸ்.-04 என்ற பூமி கண்காணிப்பு செயற்கை கோள், ஒரு மாணவரின் செயற்கைகோள் உள்ளிட்ட 3 செயற்கைகோள்கள் இடம் பெற்றுள்ளன. இந்த பி.எஸ்.எல்.வி. சி-52 ராக்கெட்டின் இறுதி கட்டப்பணியான கவுண்ட வுன் நேரம் 25 மணி 30 நிமிடமாக நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இந்த கவுண்ட வுன் ஞாயிறன்று (பிப்.13) காலை 4.29 மணிக்கு தொடங்கியது. இதைத் தொடர்ந்து திங்கட்கிழமை காலை 5.59 மணிக்கு இந்த ராக்கெட் விண்ணில் செலுத் தப்படும் என்று இந்திய விண்வெளி ஆராய்ச்சி மைய மான இஸ்ரோ தெரிவித் துள்ளது. இந்த ராக்கெட் பற்றி சமீபத்திய தகவல்களை இஸ்ரோ அதன் டிவிட்டர் பக்க த்தில் புதுப்பித்து வருகிறது.