சென்னை லயோலா கல்லூரியில் பேராசிரியர் மு .நாகநாதன் எழுதிய வளர்ச்சியா ? விழுச்சியா?, பொறிகள், Dravidian Political Economy ஆகிய முன்று நூல்களை திராவிடர் கழகத்தலைவர் கி.வீரமணி வெளியீட்டார். இவ்விழாவில் சென்னை உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன், இந்தியக் கடல்சார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் கே.அசோக் வரதன் ஷெட்டி, சென்னைப் பல்கலைக்கழகத்தின் அரசியல் மற்றும் பொது நிர்வாகவியல் துறையின் முன்னாள் தலைவர் பேராசிரியர் முனைவர் இராமு மணிவண்ன் மற்றும் லயோலா கல்லூரியின் சமூக அறிவியல் மையத்தின் இயக்குநர் பேராசிரியர் பெர்னார்ட் டி சாமி ஆகியோர் பங்கேற்று உரையாற்றினார்கள்.