சென்னை, ஜன.9- ஜாக்டோ-ஜியோ போராட்ட காலத்தில் ஒழுங்கு நடவடிக்கையாக ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட பணியிட மாறுதல் உத்தரவு களை ரத்து செய்து, அவர்கள் முன்பு பணியாற்றிய பணியிடங்களில் பணிய மர்த்தப்பட வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து மாநில பொதுச்செயலாளர் ச.மயில் அரசுக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ சார்பில் 22.1.2019 முதல் 30.1.2019 வரை நடைபெற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்ற தற்காக தமிழ்நாடு முழுவதும் ஆயிரக்கணக் கான ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எனக் கூறி பணியிட மாறுதல் செய்யப்பட்ட னர்.
அவ்வாறு மாறுதல் செய்யப்பட்ட ஆசிரி யர்களது பணியிட மாறுதலை ரத்து செய்து பழைய பணியிடத்திலேயே பணியாற்ற அனு மதி வழங்க வேண்டும் என முதல்வரிடம் பல்வேறு ஆசிரியர் அமைப்புகள் வைத்த கோரிக்கையின் அடிப்படையில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் விதி 110இன் கீழ் 7.9.2021 அன்று அறிவிப்பை வெளியிட்ட முதல்வர், ஜாக்டோ-ஜியோ போராட்ட காலத்தில் எடுக்கப் பட்ட அனைத்து ஒழுங்கு நடவடிக்கைகளும் ரத்து செய்யப்படும் என அறிவித்தார். மேலும் போராட்டக் காலத்தில் பணியிட மாறுதல் செய்யப்பட்ட ஆசிரியர்கள் மீண்டும் பழைய பணியிடத்திலேயே பணிய மர்த்தப்பட பொதுமாறுதல் கலந்தாய்வில் முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அறிவித்தார். அதனடிப்படையில் அரசாணை (நிலை) எண்:113 மனிதவள மேலாண்மைத் (கே) துறை 13.10.2021 அன்று வெளியிடப்பட்டது.
இந்த அரசாணையால் ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டதற்காக பணி மாறுதல் செய்யப்பட்டவர்கள் மீண்டும் பழைய இடத்தில் பணியில் சேர்வதற்கு இய லாத நிலை உள்ளது. போராட்டத்தில் ஈடுபட்ட தற்காக பணியிட மாறுதல் செய்யப்பட்ட ஆசிரி யர்களில் 90 விழுக்காட்டிற்கும் மேற்பட்டோ ரின் பணியிடங்களில் ஏற்கனவே வேறு ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் வழங்கப் பட்டுள்ளது. எனவே அப்பணியிடங்கள் தற்போது காலிப்பணியிடங்களாக இல்லை. இந்நிலையில் தற்போது மாறுதல் கலந்தாய்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதற்கு முன்னர் பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் மீண்டும் பழைய பணியிடத்தில் பணியாற்றும் விதமாக போரா ட்டக் காலத்தில் வழங்கப்பட்ட அனைத்து பணியிட மாறுதல் உத்தரவுகளையும் ரத்து செய்து உத்தரவிடவேண்டுகிறோம். அப்போதுதான் முதலமைச்சரின் அறிவிப்பு ஆசிரியர்களுக்கு பயன்தருவதாகஅமையும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.