15 வயது முதல் 18 வயது உடையவர்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தும் முகாமை புதுச்சேரி கதிர்காமத்தில் உள்ள தில்லையாடி வள்ளியம்மை அரசு உயர்நிலைப் பள்ளியில் முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டு துவக்கி வைத்தார். சட்டமன்ற உறுப்பினர் ரமேஷ், சுகாதாரத்துறை இயக்குநர் ஸ்ரீராமுலு மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.